பதிவு செய்த நாள்
26 மே2020
23:31
புதுடில்லி:டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், அதன் ஊழியர்களின் சம்பளத்தில், 20 சதவீதத்தை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புகளை அடுத்து, இந்நிறுவனம், அதன் ஊழியர்களின் சம்பளத்தை, 6 மாதங்களுக்கு, 20 சதவீதம் குறைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பள வெட்டு மே, மாதத்திலிருந்து துவங்கி, அக்டோபர் முடிய இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.இந்த சம்பள குறைப்பு, அதிகாரிகள் மட்டத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே செய்யப்படும் என்றும்; ஆரம்ப நிலை ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், டி.வி.எஸ்., மோட்டார் தெரிவித்துள்ளது.
இளநிலை அதிகாரிகளுக்கு, 5 சதவீதம் அளவிலும்; உயரதிகாரிகளுக்கும் 15 சதவீதத்திலிருந்தும் 20 சதவீதம் வரையும் குறைக்கப்பட உள்ளது.கொரோனா பரவலால் நாடு முடக்கப்பட்ட நிலையில், வாகன விற்பனை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முன்பிருந்தே வாகன விற்பனை குறைந்து வந்தது. தற்போது, மீண்டும் விற்பனை எப்போது உயரும் என்பது தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, சம்பள குறைப்பு நடவடிக்கையை, டி.வி.எஸ்., மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.இந்நிறுவனம், அதன் இருசக்கர வாகனங்களை, உள்நாட்டில் மட்டுமின்றி; 60க்கும் மேற்பட்ட நாடுகளிலும் விற்பனை செய்து வருகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|