கொடுத்து சிவந்த கரங்களே கொஞ்சம் கவனியுங்கள்!கொடுத்து சிவந்த கரங்களே கொஞ்சம் கவனியுங்கள்! ...  பொருளாதார வளர்ச்சி 1.2 சதவீதம்:’எகோரேப்’ அறிக்கை பொருளாதார வளர்ச்சி 1.2 சதவீதம்:’எகோரேப்’ அறிக்கை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏர்டெல் பங்குகள் விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2020
23:37

புதுடில்லி:பார்தி டெலிகாம் நிறுவனம் அதன் வசம் இருக்கும் பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகளை விற்பனை செய்து, 100 கோடி டாலர் அதாவது கிட்டத்தட்ட, 7,550 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.

‘ஜியோ பிளாட்பார்ம்’ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதன் கடனை அடைப்பதற்காக, ‘ஜியோ பிளாட்பார்ம்’ பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டி வருகிறது. அதேபோன்ற ஒரு முயற்சியில், ஏர்டெல் நிறுவனமும் தன், கடனை அடைப்பதற்காக இறங்க உள்ளது.

பார்தி டெலிகாம் நிறுவனம், அதன் வசம் இருக்கும் ஏர்டெல்லின் 2.75 சதவீத பங்குகளை, ஒரு பங்கின் விலை, 558 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்ய இருப்பதாக தெரிகிறது.இது குறித்து, விபரம் தெரிந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பார்தி ஏர்டெல் நிறுவனம், ஜே.பி., மார்கன் நிறுவனத்தின் துணையுடன், 100 கோடி டாலரை திரட்ட திட்டமிட்டுஉள்ளது. இதற்காக, 15 கோடி பங்குகள் வரை விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஒரு பங்கின் விலை, 558 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படும்.


முதலீட்டாளர்கள் வசம்

கடந்த, 22ம் தேதி விலையான, 593.20 ரூபாயுடன் ஒப்பிட்டால், இது, 6 சதவீத தள்ளுபடி விலையாகும்.இதில் திரட்டப்படும் தொகையைக் கொண்டு , கடனை அடைக்கும் முயற்சியில் நிறுவனம் இறங்க உள்ளது.பார்தி ஏர்டெல் நிறுவனத்தின், 41 சதவீத பங்குகள், பார்தி டெலிகாம் நிறுவனம் வசம் உள்ளன. அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் வசம், 21.46 சதவீதம் உள்ளது. சந்தை பொது முதலீட்டாளர்கள் வசம், 37 சதவீத பங்குகள் உள்ளன.சுனில் பார்தி மிட்டல் மற்றும் அவர் குடும்பத்தினர் வசம், பார்தி டெலிகாம் நிறுவனத்தின், 52 சதவீத பங்குகள் உள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)