பதிவு செய்த நாள்
26 மே2020
23:37
புதுடில்லி:பார்தி டெலிகாம் நிறுவனம் அதன் வசம் இருக்கும் பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகளை விற்பனை செய்து, 100 கோடி டாலர் அதாவது கிட்டத்தட்ட, 7,550 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
‘ஜியோ பிளாட்பார்ம்’ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதன் கடனை அடைப்பதற்காக, ‘ஜியோ பிளாட்பார்ம்’ பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டி வருகிறது. அதேபோன்ற ஒரு முயற்சியில், ஏர்டெல் நிறுவனமும் தன், கடனை அடைப்பதற்காக இறங்க உள்ளது.
பார்தி டெலிகாம் நிறுவனம், அதன் வசம் இருக்கும் ஏர்டெல்லின் 2.75 சதவீத பங்குகளை, ஒரு பங்கின் விலை, 558 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்ய இருப்பதாக தெரிகிறது.இது குறித்து, விபரம் தெரிந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பார்தி ஏர்டெல் நிறுவனம், ஜே.பி., மார்கன் நிறுவனத்தின் துணையுடன், 100 கோடி டாலரை திரட்ட திட்டமிட்டுஉள்ளது. இதற்காக, 15 கோடி பங்குகள் வரை விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஒரு பங்கின் விலை, 558 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படும்.
முதலீட்டாளர்கள் வசம்
கடந்த, 22ம் தேதி விலையான, 593.20 ரூபாயுடன் ஒப்பிட்டால், இது, 6 சதவீத தள்ளுபடி விலையாகும்.இதில் திரட்டப்படும் தொகையைக் கொண்டு , கடனை அடைக்கும் முயற்சியில் நிறுவனம் இறங்க உள்ளது.பார்தி ஏர்டெல் நிறுவனத்தின், 41 சதவீத பங்குகள், பார்தி டெலிகாம் நிறுவனம் வசம் உள்ளன. அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் வசம், 21.46 சதவீதம் உள்ளது. சந்தை பொது முதலீட்டாளர்கள் வசம், 37 சதவீத பங்குகள் உள்ளன.சுனில் பார்தி மிட்டல் மற்றும் அவர் குடும்பத்தினர் வசம், பார்தி டெலிகாம் நிறுவனத்தின், 52 சதவீத பங்குகள் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|