பதிவு செய்த நாள்
27 மே2020
00:16
புதுடில்லி:ஊபர் இந்தியா நிறுவனம், 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது, நாட்டில் உள்ள அதன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில், நான்கில் ஒரு பங்கு ஆகும். கொரோனா காரணமாக, வணிகத்தில் ஏற்பட்ட பாதிப்பால், ஊபர் இந்தியா இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.
அண்மையில், போட்டி நிறுவனமான ஓலா, 1,400 பேர்களை பணியிலிருந்து நீக்கி அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, இப்போது, ஊபர் நிறுவனமும் ஆட்குறைப்பை அறிவித்துள்ளது.இது குறித்து, ஊபர் இந்தியாவின் தலைவர் பிரதீப் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா தாக்கத்தின் காரணமாக, பணியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பதை தவிர வேறு வழி இல்லை. ஓட்டுனர் முதல் அலுவலக முழுநேரப் பணியாளர்கள் வரையிலான பிரிவில், 600 பேர்களை பணிநீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு, 10 வார சம்பளமும் ;அடுத்த ஆறு மாதங்களுக்கு மருத்துவ காப்பீட்டு வசதியும்; வேறு இடங்களில் வேலை வாய்ப்புகளுக்கான உதவியும் வழங்கப்படும்.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நிறுவனத்தில் அவர்கள் செய்த பங்களிப்புக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|