ஊபர் நிறுவனத்தில் 600 பேர் நீக்கம் ஊபர் நிறுவனத்தில் 600 பேர் நீக்கம் ...  ‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம் ‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம் ...
கொரோனா பாதிப்பு காரணமாக நோக்கியா தொழிற்சாலை மூடல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2020
23:46

சென்னை:ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ‘நோக்கியா’ தொழிற்சாலை ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து, நோக்கியா எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், தகவல் அறிந்தவர்கள், குறைந்தபட்சம், 42 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, நோக்கியா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:தொழிற்சாலையில் பணிபுரியும் சிலருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, ஆலை செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.தொழிற்சாலையை பொறுத்தவரை, ஏற்கனவே சமூக இடைவெளியை பராமரிப்பது, உணவகத்தில் மாற்றங்கள் ஆகியவை செய்யப்பட்டு உள்ளன. முடக்கத்தை, அரசு தளர்த்திய பிறகு, கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் தொழிற்சாலை துவங்கப்பட்டது.

இருப்பினும், தற்போது ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்ததை அடுத்து, ஆலை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இருப்பினும், குறைந்த அளவு ஊழியர்கள் பலத்துடன் விரைவில் தொழிற்சாலை செயல்படும்.இவ்வாறு, ‘நோக்கியா’ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், ‘ஒப்போ’ ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமும், அதன் ஊழியர்கள் சிலருக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து, டெல்லி புறநகர் பகுதியிலுள்ள அதன் தொழிற்சாலை செயல்பாட்டை, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)