பதிவு செய்த நாள்
27 மே2020
23:46
சென்னை:ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ‘நோக்கியா’ தொழிற்சாலை ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனை ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து, நோக்கியா எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், தகவல் அறிந்தவர்கள், குறைந்தபட்சம், 42 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, நோக்கியா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:தொழிற்சாலையில் பணிபுரியும் சிலருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, ஆலை செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.தொழிற்சாலையை பொறுத்தவரை, ஏற்கனவே சமூக இடைவெளியை பராமரிப்பது, உணவகத்தில் மாற்றங்கள் ஆகியவை செய்யப்பட்டு உள்ளன. முடக்கத்தை, அரசு தளர்த்திய பிறகு, கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் தொழிற்சாலை துவங்கப்பட்டது.
இருப்பினும், தற்போது ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்ததை அடுத்து, ஆலை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இருப்பினும், குறைந்த அளவு ஊழியர்கள் பலத்துடன் விரைவில் தொழிற்சாலை செயல்படும்.இவ்வாறு, ‘நோக்கியா’ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், ‘ஒப்போ’ ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமும், அதன் ஊழியர்கள் சிலருக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து, டெல்லி புறநகர் பகுதியிலுள்ள அதன் தொழிற்சாலை செயல்பாட்டை, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|