பதிவு செய்த நாள்
27 மே2020
23:54
புதுடில்லி:அண்மைக் காலமாக, ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தில் தொடர்ந்து முதலீடுகள் குவிந்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், அடுத்த கட்டமாக, அமெரிக்காவின், ‘நாஸ்டாக்’ சந்தையில், ஜியோவின் பங்குகளை பட்டியலிடும் முயற்சியில் ரிலையன்ஸ் இறங்கி உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
பல்லாயிரம் கோடி ரூபாய்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான, ஜியோ பிளாட்பார்மில், பேஸ்புக், சில்வர் லேக், ஜெனரல் அட்லான்டிக், கே.கே.ஆர்., என பல பெரிய நிறுவனங்கள், அண்மையில் பல்லாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.
மேலும் பல நிறுவனங்கள், ஜியோவில் முதலீட்டை மேற்கொள்ளும் முயற்சியில் இருக்கின்றன.இந்நிலையில், அடுத்த கட்டமாக, ரிலையன்ஸ் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள பங்குச் சந்தைகளில் ஒன்றான, ‘நாஸ்டாக்’ சந்தையில், ஜியோ பிளாட்பார்ம் பங்குகளை வெளியிடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
புதிய பங்கு வெளியீடு
இது குறித்து, தகவல் அறிந்த வட்டாரங்களில் கூறப்படுவதாவது:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஜியோ பிளாட்பார்மின், 20 முதல், 25 சதவீத பங்குகளை விற்பனை செய்த பிறகு, புதிய பங்கு வெளியீட்டு வேலைகளில் இறங்க உள்ளது.மேலும், நேரடி பட்டியலிடுதல் குறித்த அரசின் வழிக்காட்டுதல் முறைகளும் வெளியிடப்பட வேண்டியதுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில், ஜியோ பிளாட்பார்மின், 17.12 சதவீத பங்குகள் விற்பனை செய்யப் பட்டு உள்ளன. இதன் மூலமாக, ரிலையன்ஸ், 78 ஆயிரத்து, 562 கோடி ரூபாயை முதலீடாக பெற்றுள்ளது.25 சதவீதம் அளவுக்கு பங்குகள் விற்பனை செய்யப்பட்டவுடன், அமெரிக்காவின், ‘நாஸ்டாக்’ பங்குச் சந்தையில், ஜியோ பிளாட்பார்ம் புதிய பங்கு வெளியீட்டில் இறங்கும்.இவ்வாறு கூறப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|