கொரோனா பாதிப்பு காரணமாக நோக்கியா தொழிற்சாலை மூடல் கொரோனா பாதிப்பு காரணமாக நோக்கியா தொழிற்சாலை மூடல் ...  ‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம் ‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
அன்னிய முதலீடு அதிகரிப்பால் பங்குச் சந்தைகள் உயர்ந்தன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2020
00:03

மும்பை:நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில், வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தது. மேலும் சென்செக்ஸ், 996 புள்ளிகள் உயர்வை சந்தித்தது.நிலை பெற்றது

மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ நேற்றைய வர்த்தகத்தின் இடையே, 31,660.60 புள்ளிகள் அளவுக்கு உயர்ந்தது.பின், வர்த்தகத்தின் இறுதியில், 995.92 புள்ளிகள் அதிகரித்து, 31,605.22 புள்ளிகளில் நிலை பெற்றது. இது, 3.25 சதவீத உயர்வாகும்.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’யும் நேற்று உயர்வை சந்தித்தது. வர்த்தகத்தின் இறுதியில், 285.90 புள்ளிகள் அதிகரித்து, 9314.95 புள்ளிகளில் நிலை பெற்றது. இது, 3.17 சதவீத உயர்வாகும்.


சென்செக்ஸ் பிரிவில், ஆக்சிஸ் வங்கி அதிக விலை உயர்வை சந்தித்தது. இந்நிறுவன பங்குகள், 13 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்தது. இதனையடுத்து, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, எச்.டி.எப்.சி., வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவன பங்குகளும் விலை அதிகரித்தன.

உற்சாகம்

இதற்கு மாறாக, சன் பார்மா, அல்ட்ராடெக் சிமென்ட், டைட்டன், ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்தன. உலகச் சந்தையின் போக்கு மற்றும் அதிகரித்த அன்னிய முதலீடுகள் ஆகியவை, உள்ளூர் முதலீட்டாளர்களை உற்சாகப் படுத்தியதன் காரணமாகவும் சந்தை நேற்று உயர்ந்தது. கடந்த செவ்வாய் அன்று, அன்னிய முதலீட்டாளர்கள், 4,716 கோடி ரூபாயை, பங்குகளில் முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)