பதிவு செய்த நாள்
31 மே2020
00:15
மும்பை:உள்நாட்டு வாகன தயாரிப்பு துறை, நடப்பு நிதியாண்டில், அதன் விற்பனையில், இரண்டு இலக்க சரிவைக் காணும் என, கிரிசில் தர நிர்ணய நிறுவனம் தெரிவித்து உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக, நாடு முடக்கப்பட்டதை அடுத்து, விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. பயணியர் மற்றும் வர்த்தக வாகனங்களின் விற்பனை, 2009 – 2010 நிதியாண்டின் அளவை எட்டும் என்றும் கிரிசில் தெரிவித்துள்ளது.
இது குறித்து கிரிசில் மேலும் தெரிவித்துள்ளதாவது:நடப்பு முழு நிதியாண்டில், பயணியர் வாகனங்களின் விற்பனை, 24- – 26 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இருசக்கர வாகன விற்பனை, 21 – -23 சதவீதம் அளவுக்கு குறையும்.வர்த்தக வாகனங்களைப் பொறுத்தவரை, 26- – 28 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் டிராக்டர் விற்பனையை பொறுத்தவரை, 7- – 9 சதவீதம் என்ற குறைந்த அளவிலான சரிவே இருக்கும்.
நகர்புறங்களில், கொரோனா பாதிப்பினால், 60 சதவீதம் பேர், தங்களது வருவாய் வளர்ச்சி குறையும் என, தெரிவித்துள்ளனர்.விற்பனை வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், அதாவது பண்டிகை காலத்தில் தான் அதிகரிக்கும். அதிலும், கிராமப் புறங்களில், இருசக்கர வாகனங்கள், டிராக்டர் ஆகியவற்றுக்கான தேவையே அதிகரிக்கும். இவ்வாறு கிரிசில் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|