பதிவு செய்த நாள்
31 மே2020
00:20
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த, 22ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 49 ஆயிரத்து, 4 கோடி டாலராக அதிகரித்துள்ளது என, இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது, இந்திய மதிப்பில்,37 லட்சம் கோடி ரூபாய் ஆகும். மேலும் இது இந்திய வரலாற்றில் இல்லாத உயர்வாகும்.
மதிப்பீட்டு வாரத்தில், அன்னிய பண மதிப்பு அதிகரித்த காரணத்தால், கையிருப்பு இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த மார்ச் மாதம், 22ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 300.5 கோடி ரூபாய் அதிகரித்து, 49 ஆயிரத்து, 4 கோடி ரூபாயாக,அன்னிய செலாவணி இருப்பு அதிகரித்துள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் இருப்பு, 172.6 கோடி டாலர் அதிகரித்து, 48 ஆயிரத்து, 704 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.மேலும் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், மே, 15ம் தேதி வரையிலான காலகட்டத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 69 ஆயிரத்து, 460 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு வாரத்தில், வெளிநாட்டு பண இருப்பு, 303.5 கோடி டாலர் அதிகரித்து, 45 ஆயிரத்து, 171 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இருப்பினும், தங்கத்தின் இருப்பு மதிப்பு, 12.7 கோடி டாலர் குறைந்து, 3,278 கோடி டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் இது, 2.47 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|