சேவைகள் துறை உற்பத்தி சிறிது அதிகரிப்பு சேவைகள் துறை உற்பத்தி சிறிது அதிகரிப்பு ... ஜியோவில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்த அபுதாபி நிறுவனம்..! ஜியோவில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்த அபுதாபி நிறுவனம்..! ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ. 36,400 கோடி விடுவித்தது மத்திய அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2020
11:48

புதுடில்லி: மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையில் இரண்டாவது தவணையாக ரூ.36,400 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 2019- 20 நிதியாண்டில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஜிஎஸ்டி தொகை ரூ.1.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனாவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், மாநில அரசுகளுக்கு வருமானம் குறைந்துள்ள சூழ்நிலையில் செலவு அதிகரித்துள்ளது. இந்நிலையில், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு , 2019-20 நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையாக ரூ.36,400 கோடியை மத்திய அரசு, நேற்று(ஜூன்4) ஒதுக்கியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கடந்த 15 நாட்களில், இழப்பீட்டு தொகையில் இரண்டாவது தவணை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2019- 20 நிதியாண்டில் மொத்த இழப்பீடும் ஒதுக்கப்பட்டு விட்டது.

கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல்- நவம்பர் மாதங்களில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ. 1,15,096 கோடியை விடுத்தது. இந்நிலையில் 2019-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதங்களுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ. 36 ஆயிரத்து 400 கோடியை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜிஎஸ்டி அறிமுகபடுத்தப்பட்ட பின்னர், இந்த வரி காரணமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்படும் இழப்பு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு சரி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)