பதிவு செய்த நாள்
05 ஜூன்2020
13:43
ஆன்லைன் வணிகத்தில் ஏகபோகமாக இருக்கும் அமேசானின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் என டெஸ்லா சி.இ.ஓவும், பிரபல தொழிலதிபரான எலன் மஸ்க் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 ராக்கெட் மூலம் இரண்டு நாசா விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் முன்னாள் நியூயார்க் டைம்ஸ் செய்தியாளரும், ஊரடங்கை கடுமையாக விமர்சித்து வருபவருமான அலெக்ஸ் பெரன்சன், ’கொரோனா மற்றும் ஊரடங்கு குறித்த உண்மைகள்: முதல் பாகம் : இறப்பு மதிப்பீடு மற்றும் எண்ணிக்கை அறிமுகம்’ என்ற தனது புத்தகம் தணிக்கை செய்யப்பட்டிருப்பதாக ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்திருந்தார்.
எலன் மஸ்க், தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இது பைத்தியகாரத்தனம்’ ஜெப் பெஜோஸ். என அமேசான் சி.இ.ஓ பெஜோஸை குறிப்பிட்டதுடன், ’அமேசான் உடனான தொடர்பை துண்டிக்க வேண்டிய நேரம். ஏகபோகமாக இருப்பது தவறு’ என பதிவிட்டார்.
எலன் மஸ்க் டுவீட்டை தொடர்ந்து அமேசானில் அலெக்ஸ் பெரன்சனின் புத்தகம் ஆன்லைனில் விற்பனைக்கு தயாராக இருப்பதாக மாறியது. ’இது உயிரோடு உள்ளது. மீண்டும் எலன் மஸ்க் உள்பட உதவிய அனைவருக்கும் நன்றி’ என அலெக்ஸ் பெரன்சன் பதிவிட்டார்.
சில பிழைகளால் புத்தகம் நீக்கப்பட்டு, மீண்டும் சேர்க்கப்பட்டதாக அமேசான் நிறுவனம் விளக்கமளித்தது. அமெரிக்காவில் கொரோனா காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதை கடுமையாக விமர்சித்து வந்த எலன் மஸ்க், வீடுகளுக்கு மக்களை இருக்குமாறு கூறியது பாசிச நடவடிக்கை எனவும் கூறியிருந்தார்.
ஜெஃப் பெஜோஸை, எலன் மஸ்க் சாடுவது இது முதன்முறையல்ல. கடந்தாண்டு பூமியில் இருந்து பல மைல் தொலைவில் விண்வெளி மையத்தில் மனிதர்கள் வாழும் வகையில், ’ஓநீல் காலனிகள்’ அமைப்பது குறித்த தனது பார்வையை பெஜோஸ் கூறினார்.
‘ஒன்றும் புரியவில்லை. காலனியை அமைக்க வேண்டுமானால் பெருமளவில் மக்களை பூமி அல்லது நிலவில் அல்லது சிறுகோளில் இருந்து கொண்டு செல்ல வேண்டும். இது அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்காவை கட்ட முயற்சிப்பது போன்றது’ என மஸ்க் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|