பதிவு செய்த நாள்
08 ஜூன்2020
13:16
வங்கிகள் கடன் கொடுக்கும் போது, கிரெடிட் ஸ்கோரை முக்கிய அம்சமாக கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. ஒருவரது கடன் தகுதியை உணர்த்தும் மூன்று இலக்க எண்ணிக்கையான கிரெடிட் ஸ்கோர், மொத்த கடன், திரும்பி செலுத்தும் தன்மை, கடன் வகை, அதன் பயன்பாடு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக கொண்டு அமைகின்றன. இருப்பினும், கிரெடிட் ஸ்கோர் தொடர்பாக தவறான கருத்துகளும் பரவலாக உள்ளன. அவற்றை தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது:
வருமானம் என்ன?
பரவலாக கருதப்படுவதற்கு பதிலாக வருமானம், கிரெடிட் ஸ்கோர் மீது நேரடியாக தாக்கம் செலுத்துவதில்லை. வருமானம் கடனை திரும்பி செலுத்தும் ஆற்றலை உணர்த்தலாம். ஆனால், வருமானம் அதிகம் இருந்து, கடன்களை செலுத்துவது சீராக இல்லை எனில், கிரெடிட் ஸ்கோர் குறைவாகவே இருக்கும்.
கடன் இல்லை எந்தவித கடனும் இல்லை எனில், கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்காது. ஏனெனில், கடன் வாங்கவில்லை எனில், கடன் வரலாறும் இருக்காது. கடனை செலுத்தும் ஆற்றலை கணக்கிடவும் முடியாது. எனவே புதிதாக கடன் பெறுவது கடினமாகலாம். சீரான கடன் வரலாறு இருப்பது நல்லது.
அதிக கடன்கள் பொதுவாக, பல கடன்கள் பெற்றிருப்பது பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால், பல கடன்கள் இருப்பது மட்டுமே, மோசமான கிரெடிட் ஸ்கோரை அளிக்காது. பல கடன்கள் இருந்து, அவற்றை சீராக திரும்பி செலுத்தினால் கிரெடிட் ஸ்கோர் பாதிக்காது. குறைந்த கடன் இருந்து, சரியாக திரும்பி செலுத்தவில்லை எனில் பாதிப்பு ஏற்படும்.
கார்டில் கவனம் சிறந்த கிரெடிட் கார்டு பயன்பாடு மூலம், கிரெடிட் வரலாற்றை பலப்படுத்திக்கொள்ளலாம் என்பது உண்மை தான். ஆனால், அதற்காக பல கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பது சாதகமாக அமையாது. இதனால், அவற்றின் கடன்களை நிர்வகிப்பதில் சிக்கல் ஏற்படலாம். தேவைக்கேற்ப ஒரு சில கார்டுகள் இருந்தால் போதுமானது.
பழைய கடன்
இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கான கடன் பழக்கம், கிரெடிட் ஸ்கோர் கணக்கில் கொள்ளப்படும். இந்த காலத்தில் ஏதேனும் கடன் இருந்து, உரிய நேரத்தில் அடைக்கப்படவில்லை எனில், கிரெடிட் ஸ்கோரில் பிரதிபலிக்கும். அனைத்து கடன்களும், கடன் அறிக்கையில் இடம்பெறும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|