பதிவு செய்த நாள்
09 ஜூன்2020
11:53
புதுடில்லி: அன்னிய முதலீட்டாளர்கள், நடப்பு மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும், 18 ஆயிரத்து, 589 கோடி ரூபாயை, இந்திய சந்தைகளில் முதலீடு செய்துள்ளனர்.
கொரோனா காரணமாக விதிக்கப்பட்டிருந்த பல்வேறு தடைகள், படிப்படியாக விலக்கப்பட்டு வந்ததால், சந்தையில் நம்பிக்கை அதிகரித்தது. இது, அன்னிய முதலீடு அதிகரிக்க காரணமாக அமைந்தது.மேலும், ‘ரிலையன்ஸ்’ உரிமை பங்குகள் வெளியீடு, உதய் கோட்டக், தன்னிடமிருந்த, கோட்டக் மகிந்திரா வங்கியின், 2.8 சதவீத பங்குகளை விற்பனை செய்தது ஆகியவையும், சந்தையில் முதலீடுகள் அதிகரிக்க காரணமாக அமைந்தன.
நடப்பு மாதத்தின், முதல் ஐந்து வர்த்தக நாட்களில், அன்னிய முதலீட்டாளர்கள், 20 ஆயிரத்து, 814 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர். இருப்பினும், கடன் பிரிவில், 2,225 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர்.இதையடுத்து, இம்மாதம், 1ம் தேதி முதல், 5ம் தேதி வரையிலான காலத்தில், அன்னிய முதலீட்டாளர்களால் செய்யப்பட்ட மொத்த முதலீடு, 18 ஆயிரத்து, 589 கோடி ரூபாய்.இதற்கு முன், அன்னிய முதலீட்டாளர்கள், மூன்று மாதங்களாக தங்களது முதலீடுகளை விற்று வெளியேறிக் கொண்டிருந்தனர்.
மே மாதத்தில், 7,366 கோடி ரூபாயையும், ஏப்ரலில், 15 ஆயிரத்து, 403 கோடி ரூபாயையும் திரும்ப எடுத்தனர். மார்ச் மாதத்தில், அதிக அளவாக, 1.1 லட்சம் கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர்.பொருளாதார வளர்ச்சிக்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக, சந்தையில் நம்பிக்கை அதிகரித்தது. இதையடுத்து, ஜூன் மாதத்தில், அன்னிய முதலீடுகள் அதிகரிக்க துவங்கி உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|