ஜூன் முதல் வாரத்தில் அன்னிய முதலீடு அதிகரிப்புஜூன் முதல் வாரத்தில் அன்னிய முதலீடு அதிகரிப்பு ... பாதுகாப்பு கவச உடைகள் ஏற்றுமதியை அதிகரிக்க வியூகம் பாதுகாப்பு கவச உடைகள் ஏற்றுமதியை அதிகரிக்க வியூகம் ...
வேலைவாய்ப்புகள் தருவதில் 'டாப் 4' இடத்தில் இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2020
00:19

பெங்களூரு:'நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலண்டில், சுரங்கம் மற்றும் கட்டுமானம், நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்' என, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
'மேன் பவர் குரூப்' எனும் நிறுவனம் எடுத்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: மேன் பவர் குரூப் நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த, பன்னாட்டு நிறுவனமாகும். இது, 'பார்ச்சூன் 500' பட்டியலில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களில் ஒன்று.
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களை கொண்ட, இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், வேலைவாய்ப்புகளை, சுரங்கம் மற்றும் கட்டுமானம், நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் அதிகம் வழங்கும் வாய்ப்பிருப்பதாக தெரிய வந்துள்ளது.இதன் மூலம், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறைகளில் வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்பதும் தெரிய வருகிறது.
மேலும், தயாரிப்பு மற்றும் சேவை நிறுவனங்கள், அடுத்த மூன்று மாதங்களுக்கு ஆட்களை பணிக்கு தேர்வு செய்வதில், அதிக கவனமாக இருக்கும்.மொத்த விற்பனை மற்றும் சில்லரை வர்த்தகம் ஆகிய துறைகளில், மிகுந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
வேலைவாய்ப்புகளை வழங்குவதில், வடக்கு மற்றும் தெற்கு பகுதி மாநிலங்கள், மேற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களை விட, அதிக நம்பிக்கையுடன் இருக்கின்றன.பணியமர்த்துவது குறித்த நம்பிக்கையுடன் இருக்கும், 44 நாடுகளில், இந்தியா, 'டாப் 4' நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.
இந்தியா மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. அரசின் ஊக்க திட்டங்கள், பொருளாதார செயல்பாடுகளை அதிகரிக்கும் வகையில் இருக்கின்றன.இத்தகைய போக்குகள், இந்த நிதியாண்டின் இறுதிக்குள், வேலைவாய்ப்புகளில் பிரகாசமான எதிர்காலத்தை கொண்டு வரும் என, எதிர்பார்க்கலாம்.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)