பதிவு செய்த நாள்
10 ஜூன்2020
00:19
பெங்களூரு:'நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலண்டில், சுரங்கம் மற்றும் கட்டுமானம், நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்' என, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
'மேன் பவர் குரூப்' எனும் நிறுவனம் எடுத்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: மேன் பவர் குரூப் நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த, பன்னாட்டு நிறுவனமாகும். இது, 'பார்ச்சூன் 500' பட்டியலில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களில் ஒன்று.
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களை கொண்ட, இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், வேலைவாய்ப்புகளை, சுரங்கம் மற்றும் கட்டுமானம், நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் அதிகம் வழங்கும் வாய்ப்பிருப்பதாக தெரிய வந்துள்ளது.இதன் மூலம், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறைகளில் வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்பதும் தெரிய வருகிறது.
மேலும், தயாரிப்பு மற்றும் சேவை நிறுவனங்கள், அடுத்த மூன்று மாதங்களுக்கு ஆட்களை பணிக்கு தேர்வு செய்வதில், அதிக கவனமாக இருக்கும்.மொத்த விற்பனை மற்றும் சில்லரை வர்த்தகம் ஆகிய துறைகளில், மிகுந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
வேலைவாய்ப்புகளை வழங்குவதில், வடக்கு மற்றும் தெற்கு பகுதி மாநிலங்கள், மேற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களை விட, அதிக நம்பிக்கையுடன் இருக்கின்றன.பணியமர்த்துவது குறித்த நம்பிக்கையுடன் இருக்கும், 44 நாடுகளில், இந்தியா, 'டாப் 4' நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.
இந்தியா மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. அரசின் ஊக்க திட்டங்கள், பொருளாதார செயல்பாடுகளை அதிகரிக்கும் வகையில் இருக்கின்றன.இத்தகைய போக்குகள், இந்த நிதியாண்டின் இறுதிக்குள், வேலைவாய்ப்புகளில் பிரகாசமான எதிர்காலத்தை கொண்டு வரும் என, எதிர்பார்க்கலாம்.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|