பதிவு செய்த நாள்
10 ஜூன்2020
23:53
திருப்பூர்:வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியைப் பெருக்க, மெய்நிகர் கண்காட்சிகளை நடத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வால், நாடு முழுக்க, தொழில்கள் புத்துயிர் பெற்று வருகின்றன. கொரோனா தொற்று அபாயத்தால், உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்களுடன், தொழில் நிறுவனத்தினர் நேரடி தொடர்பு கொள்வதில் சிக்கல் உள்ளது. உள்நாட்டு நுகர்வு மற்றும் ஏற்றுமதியை பெருக்க, தொழில் துறை சார்ந்த, மெய்நிகர் கண்காட்சிகளை நடத்த, மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:கைவினை பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில், பேஷன் நகைகள் மற்றும் அக்சசரீஸ் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில், 200 ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர். அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு வர்த்தகர்களை மையமாக கொண்டு நடத்தப்பட்ட இக்கண்காட்சியில், 153 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
கண்காட்சியில் இடம்பெற்ற கைவினைப்பொருட்களுக்காக உற்பத்தியாளர்கள், மெய்நிகர் அரங்குகளை அமைத்து இருந்தனர். வெளிநாட்டு வர்த்தகர்கள் அதை, ‘க்ளிக்’ செய்தால், அரங்குக்குள் சென்று, கைவினைத் தயாரிப்புகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்க்க முடியும்.
கோவை, திருப்பூரில் வார்ப்படம், பின்னலாடை, ஜவுளி, ஆட்டோமொபைல் சாதனம், வெட்கிரைண்டர் உட்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தியாகின்றன. கொரோனா பரவல் காரணமாக, பின்னலாடை, ஜவுளி இயந்திர கண்காட்சி உள்ளிட்டவற்றை நடத்த இயலாத நிலை உள்ளது. இவற்றுக்கான மெய்நிகர் கண்காட்சிகள் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|