சீன பொருட்களை விரும்பாததால் ‘வியு டிவி’ விற்பனை அதிகரிப்பு சீன பொருட்களை விரும்பாததால் ‘வியு டிவி’ விற்பனை அதிகரிப்பு ...  வீட்டிலிருந்து அலுவலக பணி கூடுதல் இடவசதி தேவை அதிகரிக்கும் வீட்டிலிருந்து அலுவலக பணி கூடுதல் இடவசதி தேவை அதிகரிக்கும் ...
மெய்நிகர் கண்காட்சி மூலம் வர்த்தகத்தை அதிகரிக்க முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2020
23:53

திருப்பூர்:வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியைப் பெருக்க, மெய்நிகர் கண்காட்சிகளை நடத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வால், நாடு முழுக்க, தொழில்கள் புத்துயிர் பெற்று வருகின்றன. கொரோனா தொற்று அபாயத்தால், உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்களுடன், தொழில் நிறுவனத்தினர் நேரடி தொடர்பு கொள்வதில் சிக்கல் உள்ளது. உள்நாட்டு நுகர்வு மற்றும் ஏற்றுமதியை பெருக்க, தொழில் துறை சார்ந்த, மெய்நிகர் கண்காட்சிகளை நடத்த, மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:கைவினை பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில், பேஷன் நகைகள் மற்றும் அக்சசரீஸ் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில், 200 ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர். அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு வர்த்தகர்களை மையமாக கொண்டு நடத்தப்பட்ட இக்கண்காட்சியில், 153 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

கண்காட்சியில் இடம்பெற்ற கைவினைப்பொருட்களுக்காக உற்பத்தியாளர்கள், மெய்நிகர் அரங்குகளை அமைத்து இருந்தனர். வெளிநாட்டு வர்த்தகர்கள் அதை, ‘க்ளிக்’ செய்தால், அரங்குக்குள் சென்று, கைவினைத் தயாரிப்புகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்க்க முடியும்.

கோவை, திருப்பூரில் வார்ப்படம், பின்னலாடை, ஜவுளி, ஆட்டோமொபைல் சாதனம், வெட்கிரைண்டர் உட்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தியாகின்றன. கொரோனா பரவல் காரணமாக, பின்னலாடை, ஜவுளி இயந்திர கண்காட்சி உள்ளிட்டவற்றை நடத்த இயலாத நிலை உள்ளது. இவற்றுக்கான மெய்நிகர் கண்காட்சிகள் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)