பதிவு செய்த நாள்
11 ஜூன்2020
22:54
புதுடில்லி:ரிலையன்ஸ் நிறுவனத்தின், உரிமை பங்குகள் வெளியீட்டில், முகேஷ் அம்பானிக்கு, 5.52 லட்சம் பங்குகள் கிடைத்துள்ளன.
ரிலையன்ஸ் நிறுவனம், 53 ஆயிரத்து, 124 கோடி ரூபாய் நிதி திரட்டும் பொருட்டு, அண்மையில், உரிமை பங்குகளை வெளியிட்டது. இவ்வெளியீட்டின்போது, ஒரு பங்கின் விலை, 1,257 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. இது, ஏப்ரல் 30ம் தேதி விலை நிலவரமாகும். மேலும், 15 பங்குகளுக்கு ஒரு பங்கு வீதம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, 1.6 மடங்கு அதிகமாக விண்னப்பங்கள் குவிந்தன.
இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம், விண்ணப்பித்தவர்களுக்கு பங்குகளை ஒதுக்கி அறிவித்துஉள்ளது.இதன்படி, முகேஷ் அம்பானிக்கு, 5.52 லட்சம் பங்குகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக, ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.அம்பானி வசம் தற்போது, 80.52 லட்சம் பங்குகள் உள்ளன. இது, 0.12 சதவீதம் ஆகும். உரிமை பங்கு வெளியீட்டுக்கு முன் அவரிடம், 75 லட்சம் பங்குகள் இருந்தன.
இதேபோல் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, குழந்தைகள் இஷா, ஆகாஷ் ஆகியோருக்கும் தலா, 5.52 லட்சம் பங்குகள் கிடைத்துள்ளன. மொத்தத்தில், நிறுவனர்கள் குழுவுக்கு, 22.50 கோடி பங்குகள் கிடைத்துள்ளன. இதையடுத்து, இவர்களின் பங்கு, 50.07 சதவீதத்திலிருந்து, 50.29 சதவீதமாக அதிகரித்துஉள்ளது.பொது பங்குதாரர்களின் பங்கு, 49.93 சதவீதத்திலிருந்து, 49.71 சதவீதமாக குறைந்துள்ளது.
பொது பங்குதாரர்கள், 19.74 கோடி பங்குகளை பெற்றுள்ளனர்.எல்.ஐ.சி., நிறுவனத்திற்கு, 2.47 கோடி பங்குகள் ஒதுக்கப்பட்டதை அடுத்து, அதன் வசம் தற்போது, 37.18 கோடி பங்குகள் உள்ளன. இது, 6 சதவீதம் ஆகும்.நிறுவனம், தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு, மொத்தம், 42.24 கோடி பங்குகளை ஒதுக்கி, நேற்று அறிவித்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|