மெய்நிகர் கண்காட்சி மூலம் வர்த்தகத்தை அதிகரிக்க முயற்சி மெய்நிகர் கண்காட்சி மூலம் வர்த்தகத்தை அதிகரிக்க முயற்சி ...  வீட்டிலிருந்து அலுவலக பணி கூடுதல் இடவசதி தேவை அதிகரிக்கும் வீட்டிலிருந்து அலுவலக பணி கூடுதல் இடவசதி தேவை அதிகரிக்கும் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
முகேஷ் அம்பானிக்கு ஒதுக்கீடு 5.52 லட்சம் உரிமை பங்குகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2020
22:54

புதுடில்லி:ரிலையன்ஸ் நிறுவனத்தின், உரிமை பங்குகள் வெளியீட்டில், முகேஷ் அம்பானிக்கு, 5.52 லட்சம் பங்குகள் கிடைத்துள்ளன.

ரிலையன்ஸ் நிறுவனம், 53 ஆயிரத்து, 124 கோடி ரூபாய் நிதி திரட்டும் பொருட்டு, அண்மையில், உரிமை பங்குகளை வெளியிட்டது. இவ்வெளியீட்டின்போது, ஒரு பங்கின் விலை, 1,257 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. இது, ஏப்ரல் 30ம் தேதி விலை நிலவரமாகும். மேலும், 15 பங்குகளுக்கு ஒரு பங்கு வீதம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, 1.6 மடங்கு அதிகமாக விண்னப்பங்கள் குவிந்தன.

இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம், விண்ணப்பித்தவர்களுக்கு பங்குகளை ஒதுக்கி அறிவித்துஉள்ளது.இதன்படி, முகேஷ் அம்பானிக்கு, 5.52 லட்சம் பங்குகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக, ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.அம்பானி வசம் தற்போது, 80.52 லட்சம் பங்குகள் உள்ளன. இது, 0.12 சதவீதம் ஆகும். உரிமை பங்கு வெளியீட்டுக்கு முன் அவரிடம், 75 லட்சம் பங்குகள் இருந்தன.

இதேபோல் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, குழந்தைகள் இஷா, ஆகாஷ் ஆகியோருக்கும் தலா, 5.52 லட்சம் பங்குகள் கிடைத்துள்ளன. மொத்தத்தில், நிறுவனர்கள் குழுவுக்கு, 22.50 கோடி பங்குகள் கிடைத்துள்ளன. இதையடுத்து, இவர்களின் பங்கு, 50.07 சதவீதத்திலிருந்து, 50.29 சதவீதமாக அதிகரித்துஉள்ளது.பொது பங்குதாரர்களின் பங்கு, 49.93 சதவீதத்திலிருந்து, 49.71 சதவீதமாக குறைந்துள்ளது.


பொது பங்குதாரர்கள், 19.74 கோடி பங்குகளை பெற்றுள்ளனர்.எல்.ஐ.சி., நிறுவனத்திற்கு, 2.47 கோடி பங்குகள் ஒதுக்கப்பட்டதை அடுத்து, அதன் வசம் தற்போது, 37.18 கோடி பங்குகள் உள்ளன. இது, 6 சதவீதம் ஆகும்.நிறுவனம், தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு, மொத்தம், 42.24 கோடி பங்குகளை ஒதுக்கி, நேற்று அறிவித்தது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)