மெய்நிகர் கண்காட்சி மூலம் வர்த்தகத்தை அதிகரிக்க முயற்சி மெய்நிகர் கண்காட்சி மூலம் வர்த்தகத்தை அதிகரிக்க முயற்சி ...  ஆதாயத்துக்கான ஆய்வு மத்திய அரசு சாடல் ஆதாயத்துக்கான ஆய்வு மத்திய அரசு சாடல் ...
வீட்டிலிருந்து அலுவலக பணி கூடுதல் இடவசதி தேவை அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2020
22:58

புதுடில்லி:கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, வீட்டிலிருந்து அலுவலக பணிகளை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டதை அடுத்து, கூடுதல் இடவசதி கொண்ட வீடுகளுக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அலுவலக பணிகளை வீட்டிலிருந்து மேற்கொள்வதற்கு ஊழியர்கள், நிர்வாகம் என இரு தரப்பிலிருந்தும் வரவேற்பு அதிகரித்து வருகிறது.


‘ஆன்லைன்’


வகுப்புகள்பணிபுரியும் முறையில் ஒரு புதிய மாற்றத்தை இந்த போக்கு ஏற்படுத்தி வருகிறது.இதையடுத்து, இத்தகைய போக்கு அதிகரிக்கும் நிலையில், வீட்டில், அலுவலக பணிகளுக்கு என தனி இடத்தை நிரந்தரமாக அமைக்க வேண்டிய நிலை உருவாகும்.


இதனால், தற்போது இருக்கும் இடத்தை விட, அதிக இடவசதி கொண்ட வீடுகளுக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டில் வசிப்பவர்களுக்கு, குறைந்தபட்சம், மூன்று அறை கொண்ட வீட்டுக்கான தேவை உருவாகும். இதன் மூலம், ஓர் அறையை அலுவலக பணிக்காக அவர்களால் ஒதுக்கிக்கொள்ள இயலும். கூடவே ஆன்லைன் வகுப்புகள் உள்ளிட்டவையும் தனி இடவசதியை கோருவதாக அமையும் என கருதப்படுகிறது.


அதிக இடவசதி

புதிதாக வீடுகளை வடிவமைப்போர்,இனி அலுவலக பணிகளை மேற்கொள்ளும் வகையிலும், வீட்டுக்கான வரைபடத்தை தயாரிக்க வேண்டியதிருக்கும் நிலை உருவாகக் கூடும்.இது குறித்து, எச்.டி.எப்.சி., நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரேணு சூட் கர்னாட் கூறியதாவது:

புதிய இயல்பு நிலையாக, வீட்டிலிருந்து பணிபுரிவது மாறி வருகிறது. இதன் காரணமாக, அதிக இடவசதி கொண்ட வீடுகளுக்கான தேவைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். அதிலும், கணவர்_ மனைவி இருவரும் வேலை பார்க்கும் நிலையில், அதிக இடவசதி நிச்சயம் தேவைப்படும்.


இவை அனைத்தும் ஒரு வீட்டின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு மட்டுமின்றி, ஒரு வீட்டை சொந்தமாக்குவதற்கான அவசர உணர்வையும் உருவாக்கி வருகிறது என்று நாங்கள் நம்புகிறோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)