வீட்டிலிருந்து அலுவலக பணி கூடுதல் இடவசதி தேவை அதிகரிக்கும் வீட்டிலிருந்து அலுவலக பணி கூடுதல் இடவசதி தேவை அதிகரிக்கும் ...  ஆதாயத்துக்கான ஆய்வு மத்திய அரசு சாடல் ஆதாயத்துக்கான ஆய்வு மத்திய அரசு சாடல் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தலைவரை விட அதிக சம்பளம் ஆள் தேடும் எஸ்.பி.ஐ.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2020
23:02

புதுடில்லி:பாரத ஸ்டேட் வங்கி, அதன் வரலாற்றில் முதன் முறையாக, தலைமை நிதி அதிகாரி பதவிக்கு, வெளியிலிருந்து தகுந்த நபரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

இதுநாள் வரை, எஸ்.பி.ஐ., இது போன்ற உயர் பதவிகளுக்கு, வங்கியில் பணிபுரிந்து வரும் மூத்த அதிகாரிகளையே தேர்ந்தெடுத்து நியமித்து வந்தது.ஆனால், இம்முறை, முதன் முறையாக, தலைமை நிதி அதிகாரி பதவிக்கு, வங்கியில் பணிபுரிந்து வருபவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்காமல், வெளியிலிருந்து தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர், ஒப்பந்த அடிப்படையில், மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுவார் என தெரிவித்துள்ளது.மேலும், ஆண்டு ஊதியமாக, 75 லட்சத்திலிருந்து, 1 கோடி ரூபாய் வரை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இதில் சுவாரஸ்யமான இன்னொரு விஷயம் என்னவென்றால், எஸ்.பி.ஐ., வங்கி தலைவரின் ஊதியமே, கடந்த, 2018 – 19ம் நிதியாண்டு தகவல்படி, 29.5 லட்சம் ரூபாய் தான்.தற்போது, வங்கியின் துணை நிர்வாக இயக்குனர் வெங்கட் நாகேஸ்வர் ஜல்சானி, கூடுதலாக, தலைமை நிதி அதிகாரி பொறுப்பையும் வகித்து வருகிறார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)