பதிவு செய்த நாள்
11 ஜூன்2020
23:02
புதுடில்லி:பாரத ஸ்டேட் வங்கி, அதன் வரலாற்றில் முதன் முறையாக, தலைமை நிதி அதிகாரி பதவிக்கு, வெளியிலிருந்து தகுந்த நபரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.
இதுநாள் வரை, எஸ்.பி.ஐ., இது போன்ற உயர் பதவிகளுக்கு, வங்கியில் பணிபுரிந்து வரும் மூத்த அதிகாரிகளையே தேர்ந்தெடுத்து நியமித்து வந்தது.ஆனால், இம்முறை, முதன் முறையாக, தலைமை நிதி அதிகாரி பதவிக்கு, வங்கியில் பணிபுரிந்து வருபவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்காமல், வெளியிலிருந்து தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர், ஒப்பந்த அடிப்படையில், மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுவார் என தெரிவித்துள்ளது.மேலும், ஆண்டு ஊதியமாக, 75 லட்சத்திலிருந்து, 1 கோடி ரூபாய் வரை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதில் சுவாரஸ்யமான இன்னொரு விஷயம் என்னவென்றால், எஸ்.பி.ஐ., வங்கி தலைவரின் ஊதியமே, கடந்த, 2018 – 19ம் நிதியாண்டு தகவல்படி, 29.5 லட்சம் ரூபாய் தான்.தற்போது, வங்கியின் துணை நிர்வாக இயக்குனர் வெங்கட் நாகேஸ்வர் ஜல்சானி, கூடுதலாக, தலைமை நிதி அதிகாரி பொறுப்பையும் வகித்து வருகிறார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|