பதிவு செய்த நாள்
11 ஜூன்2020
23:03
சென்னை:நாடு முழுதும், 90 சதவீத சில்லரை விற்பனையை, மீண்டும் துவக்கி உள்ளதாக, 'ராயல் என்பீல்ட் இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, மார்ச் 22 முதல், மே 5 வரை, நிறுவனத்தின் அலுவலகங்கள், விற்பனை நிலையங்கள் போன்றவை, அரசு வழிகாட்டுதலின் படி, மூடப்பட்டிருந்தன. மே 6 முதல், வணிக மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் படிப்படியாக மீண்டும் துவங்கப்பட்டுள்ளன.
தற்போது, இந்தியா முழுதும், 90 சதவீத சில்லரை விற்பனை, சர்வீஸ் மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், உள்ளூர் நிர்வாக வழிகாட்டுதல் படி, அவை செயல்படு கின்றன. வாடிக்கையாளர்கள் திருப்தியை மேம்படுத்தவும், அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்யவும், தொடர்பு இல்லாத கொள்முதல் மற்றும் சர்வீஸ் அனுபவத்தை வழங்க, பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|