பதிவு செய்த நாள்
12 ஜூன்2020
22:02
புதுடில்லி:இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து, காப்பீட்டு நிறுவனமான, ‘ஜெனரலி’ நடத்திய ஒரு கணக்கெடுப்பை, மத்திய அரசு மறுத்துள்ளது. வெறும், 599 பேரிடம், ‘ஆன்லைன்’ மூலமாக கணக்கெடுப்பு நடத்தியிருப்பது, நாட்டின் நிலையை பிரதிபலிப்பதாக இருக்காது என அரசு தெரிவித்துள்ளது.
வருமான இழப்பு
காப்பீட்டு நிறுவனமான ஜெனரலி அண்மையில், நாட்டின் பொருளாதார நிலை குறித்து, ஆன்லைன் மூலமாக ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டது. இதில், 599 பேர் கலந்து கொண்டனர். இந்த கணக்கெடுப்பின் முடிவில், நாட்டில் பணிபுரிபவர்களில், 80 சதவீதம் பேர், வருமான இழப்பை சந்தித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த ஆய்வு முடிவுகள், நாட்டின் முழு நிலையை பிரதிபலிப்பதாக இருக்காது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ள தாவது:காப்பீட்டு நிறுவனமான ஜெனரலி, ஆன்லைன் மூலமாக வெறும், 599 பேரை மாதிரியாக வைத்து, கணக்கெடுப்பை நடத்தி இருக்கிறது. ஆன்லைன் மூலமாக வெறும், 599 பேரை மாதிரியாகக் கொண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பு, முழு இந்தியாவின் நிலையை பிரதிபலிக்காது.
தனிப்பட்ட ஆதாயம்காப்பீட்டு நிறுவனம், நாட்டின் பொருளாதார நிலையை முன்னிலைப் படுத்தி, தன்னுடைய காப்பீட்டு விற்பனையை அதிகரிப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறது. இது போன்ற கணக்கெடுப்புகளின் பின்னணியில், தனிப்பட்ட ஆதாயங்கள் காரணமாக அமைகின்றன.இவ்வாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|