பதிவு செய்த நாள்
12 ஜூன்2020
22:13
புதுடில்லி:கொரோனா காலத்திலும், ‘ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம்ஸ்’ நிறுவனத்தில், கிட்டத்தட்ட, 98 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் குவிந்தது அனைவரும் அறிந்ததே.
இந்த சாதனையை படைப்பதற்கு, முகேஷ் அம்பானிக்கு வலது கையாக இருந்து செயல்
பட்டவர், மனோஜ் மோடி.
பொதுவெளியில் அதிகம் தெரியாத பெயர், மனோஜ் மோடி. ‘பேஸ்புக்’ நிறுவனம், ஜியோவில், 43 ஆயிரத்து, 574 கோடி ரூபாய் முதலீடு செய்ததில், மனோஜ் மோடியின் பங்கு மிகப் பெரியது.
அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நிறுவனத்துடனான பேரத்திலும், இவர் பங்களிப்பு மிக அதிகம் என்கின்றனர்.
மூன்று தலைமுறை
மனோஜ் அம்பானி, 1980ம் ஆண்டுகளில் இருந்து, தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனத்தில்
பணியாற்றி வருகிறார்.இன்னும் சொல்வதென்றால், திருபாய் அம்பானி, முகேஷ் அம்பானி, இஷா மற்றும் ஆகாஷ்அம்பானி என, மூன்று தலைமுறையுடன் பணிபுரியும் வாய்ப்பு பெற்றவர்.முகேஷ் அம்பானியின் கல்லுாரித் தோழரும் கூட.
மனோஜ் மோடி, ‘ரிலையன்ஸ் ரீடெய்ல்’ மற்றும் ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம்ஸ்
நிறுவனங்களில் இயக்குனராக இருக்கிறார். இவரது பங்களிப்பு குறித்து கேட்டபோது, ‘‘நான் பேரங்களில் நேரடியாக ஈடுபடுவதில்லை. எனக்கு திட்டங்களை புரிந்துகொள்ள இயலாது. தொலைநோக்கு பார்வைகூட கிடையாது,’’ என்று முடித்துவிட்டார்.
இருப்பினும், அவரது பணி குறித்து கூறும்போது, ‘‘நான் இங்கிருப்பவர்களுடன் பழகுகிறேன்; அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன். ஏதாவது செய்ய முடியும் என்பதற்கு வழிகாட்டுகிறேன். அவ்வளவு தான்,’’ என்றார்.இறுதியாக ரிலையன்ஸ் கொள்கை குறித்து தெரிவித்தார்.
தெரியாத துாண்கள்
நிறுவனத்தின் கொள்கை மிக எளிமையானது. நம்முடன் பணிபுரியும் அனைவரும் பணம்
சம்பாதிக்காவிட்டால், நம்மால் நிலையான ஒரு வணிகத்தை வைத்திருக்க முடியாது என்பது தான்.எல்லா நிறுவனங்களிலும், மனோஜ் மோடி போன்ற, வெளியே அதிகம்தெரியாத துாண்கள்இருக்கத் தான் செய்கின்றன.
கொரோனா பாதிப்பிலும்
பங்கு வெளியீட்டு முயற்சி
புதுடில்லி, ஜூன் 13–
‘ஹேப்பியஸ்ட் மைண்டு டெக்னாலஜிஸ்’ நிறுவனம், புதிய பங்குகள் வெளியீட்டுக்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பம் செய்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த, ஹேப்பியஸ்ட் மைண்டு
டெக்னாலஜிஸ் நிறுவனம், புதிய பங்குகளை வெளியிட்டு, அதன் மூலம், 110 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
மேலும், நிறுவனர்கள் வசம் இருக்கும், 3.56 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. நாட்டில், கொரோனா தொற்று
ஏற்பட்டதையடுத்து,
மார்ச் மாதம் நாடு
முடக்கப்பட்டது.
அதன் பிறகு, முதன்
முதலாக பெரியளவிலான புதிய பங்கு வெளியீட்டுக்கு,
இந்நிறுவனம் தான்
விண்ணப்பம் செய்துள்ளது.
இந்த புதிய பங்கு வெளியீட்டின் மூலம்
திரட்டப்படும் நிதியை, நடைமுறை மூலதன தேவை மற்றும் பொதுவான நிறுவனத் தேவைகளுக்காக பயன்படுத்தி கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பெங்களூரை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், பங்குகளை, மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிட உள்ளது.
இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் மற்றும் நோமுரா பைனான்ஷியல் அட்வைசரி மற்றும் செக்யூரிட்டீஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|