பதிவு செய்த நாள்
13 ஜூன்2020
21:50
மும்பை:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமை பங்குகள், பங்குச் சந்தைகளில், நாளை பட்டியலிடப்பட உள்ளன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 53 ஆயிரத்து, 124 கோடி ரூபாய்க்கு, உரிமை பங்குகளை வெளியிட்டது. இந்தியாவில் இது தான் மிகப் பெரிய உரிமை பங்கு வெளியீடாகும். அது மட்டுமின்றி; உலகளவில் கடந்த, 10 ஆண்டுகளில், நிதி சாரா நிறுவனம் அறிவித்த மிகப் பெரிய உரிமை பங்கு வெளியீடும் இது தான்.இந்த உரிமை பங்குகளை கோரி, 1.6 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன.
இதையடுத்து, கடந்த, 11ம் தேதியன்று உரிமை பங்குகள் ஒதுக்கீடு முடிவடைந்தது. இந்நிலையில், நாளை, இந்த உரிமை பங்குகள், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப் போவதாக, ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.உரிமை பங்குகள் வெளியிடுவதாக அறிவித்து, 42 நாட்களில் பங்குகள் ஒதுக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்திலும், முழுக்க முழுக்க, டிஜிட்டல் முறையில் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.
இந்த உரிமை பங்கு வெளியீடு, அன்னிய முதலீட்டாளர்களின் கவனத்தையும் அதிகளவில் ஈர்த்துள்ளது. மார்ச், 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவன பங்குகளை வைத்திருக்கும் அன்னிய முதலீட்டாளர்கள் எண்ணிக்கை, 1,318 ஆக இருந்த நிலையில், ஜூன், 11ம் தேதி நிலவரப்படி, 1,395 ஆக அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில், அன்னிய முதலீட்டாளர்கள் வசம் இருக்கும் பங்குகளின் எண்னிக்கை, 24.15 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இதற்கு முன், மார்ச் இறுதி நிலவரப்படி இது, 23.48 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|