இயர்போன்களில் எது சிறந்தது?இயர்போன்களில் எது சிறந்தது? ...  ‘ஆங்கிலத்தை மறந்து விட்டு பிராந்திய மொழிகளுக்கு செல்லுங்கள் ‘ஆங்கிலத்தை மறந்து விட்டு பிராந்திய மொழிகளுக்கு செல்லுங்கள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ரிலையன்ஸ் உரிமை பங்குகள் நாளை பட்டியலிடப்படும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2020
21:50

மும்பை:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமை பங்குகள், பங்குச் சந்தைகளில், நாளை பட்டியலிடப்பட உள்ளன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 53 ஆயிரத்து, 124 கோடி ரூபாய்க்கு, உரிமை பங்குகளை வெளியிட்டது. இந்தியாவில் இது தான் மிகப் பெரிய உரிமை பங்கு வெளியீடாகும். அது மட்டுமின்றி; உலகளவில் கடந்த, 10 ஆண்டுகளில், நிதி சாரா நிறுவனம் அறிவித்த மிகப் பெரிய உரிமை பங்கு வெளியீடும் இது தான்.இந்த உரிமை பங்குகளை கோரி, 1.6 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன.

இதையடுத்து, கடந்த, 11ம் தேதியன்று உரிமை பங்குகள் ஒதுக்கீடு முடிவடைந்தது. இந்நிலையில், நாளை, இந்த உரிமை பங்குகள், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப் போவதாக, ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.உரிமை பங்குகள் வெளியிடுவதாக அறிவித்து, 42 நாட்களில் பங்குகள் ஒதுக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்திலும், முழுக்க முழுக்க, டிஜிட்டல் முறையில் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.

இந்த உரிமை பங்கு வெளியீடு, அன்னிய முதலீட்டாளர்களின் கவனத்தையும் அதிகளவில் ஈர்த்துள்ளது. மார்ச், 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவன பங்குகளை வைத்திருக்கும் அன்னிய முதலீட்டாளர்கள் எண்ணிக்கை, 1,318 ஆக இருந்த நிலையில், ஜூன், 11ம் தேதி நிலவரப்படி, 1,395 ஆக அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில், அன்னிய முதலீட்டாளர்கள் வசம் இருக்கும் பங்குகளின் எண்னிக்கை, 24.15 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இதற்கு முன், மார்ச் இறுதி நிலவரப்படி இது, 23.48 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)