பதிவு செய்த நாள்
13 ஜூன்2020
21:56
புதுடில்லி:கோட்டக் மகிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, உதய் கோட்டக், ரிசர்வ் வங்கியின் பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டால், அவர் தன் பதவியை இழக்க நேரிடும்.
கடந்த வியாழனன்று, ரிசர்வ் வங்கி, ‘இந்திய வணிக வங்கிகளில் ஆளுகை’ என்ற தலைப்பில், ஒரு பரிந்துரையை வெளியிட்டது. அதில், வங்கிகளின் முழுநேர இயக்குனர்கள், தலைமை செயல் அதிகாரிகள் ஆகியோரின் பதவிக் காலம் குறித்த பரிந்துரைகளை குறிப்பிட்டிருந்தது.
இதன்படி, வங்கியின் நிறுவனர் குழு தரப்பிலிருந்து, தலைமை செயல் அதிகாரியாகவோ; முழுநேர இயக்குனராகவோ பதவி வகிப்பவரின் பதவிக் காலம், அதிகபட்சம், 10 ஆண்டுகள் என தெரிவித்துள்ளது.அதேசமயம், நிறுவனர் குழுமத்திலிருந்து அல்லாமல், வெளியார் இந்த பதவிகளை வகித்தால், அவர்களது பதவிக்காலம், அதிகபட்சம், 15 ஆண்டுகள் இருக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரை, தற்போது பதவி வகித்து வரும் சிலருக்கு பாதகமாக அமையும் என தெரிகிறது.உதய் கோட்டக், தனியார் வங்கியான, கோட்டக் மகிந்திரா வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த, 2003ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.இதேபோல், ரிசர்வ் வங்கியின் பரிந்துரைப்படி, எச்.டி.எப்.சி., வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆதித்யா பூரி, இந்த ஆண்டு இறுதிக்குள் ஓய்வு பெறுவார்.
ஏற்கனவே, தனியார் துறை வங்கிகளான, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவற்றின் உயர் மட்ட பதவிகளில், ரிசர்வ் வங்கி மாற்றங்களைச் செய்துள்ளது.ரிசர்வ் வங்கியின் பரிந்துரை மூலம், வங்கியின் நிர்வாக குழு, அதன் நிறுவனர் குழுவின் அழுத்தங்கள் இன்றி செயல்பட முடியும் என கருதப்படுகிறது.நாளைக்குள் வங்கிகளின் பங்குதாரர்கள், தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி, ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|