இயர்போன்களில் எது சிறந்தது?இயர்போன்களில் எது சிறந்தது? ...  ‘ஆங்கிலத்தை மறந்து விட்டு பிராந்திய மொழிகளுக்கு செல்லுங்கள் ‘ஆங்கிலத்தை மறந்து விட்டு பிராந்திய மொழிகளுக்கு செல்லுங்கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உதய் கோட்டக் பதவி தப்புமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2020
21:56

புதுடில்லி:கோட்டக் மகிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, உதய் கோட்டக், ரிசர்வ் வங்கியின் பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டால், அவர் தன் பதவியை இழக்க நேரிடும்.

கடந்த வியாழனன்று, ரிசர்வ் வங்கி, ‘இந்திய வணிக வங்கிகளில் ஆளுகை’ என்ற தலைப்பில், ஒரு பரிந்துரையை வெளியிட்டது. அதில், வங்கிகளின் முழுநேர இயக்குனர்கள், தலைமை செயல் அதிகாரிகள் ஆகியோரின் பதவிக் காலம் குறித்த பரிந்துரைகளை குறிப்பிட்டிருந்தது.

இதன்படி, வங்கியின் நிறுவனர் குழு தரப்பிலிருந்து, தலைமை செயல் அதிகாரியாகவோ; முழுநேர இயக்குனராகவோ பதவி வகிப்பவரின் பதவிக் காலம், அதிகபட்சம், 10 ஆண்டுகள் என தெரிவித்துள்ளது.அதேசமயம், நிறுவனர் குழுமத்திலிருந்து அல்லாமல், வெளியார் இந்த பதவிகளை வகித்தால், அவர்களது பதவிக்காலம், அதிகபட்சம், 15 ஆண்டுகள் இருக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை, தற்போது பதவி வகித்து வரும் சிலருக்கு பாதகமாக அமையும் என தெரிகிறது.உதய் கோட்டக், தனியார் வங்கியான, கோட்டக் மகிந்திரா வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த, 2003ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.இதேபோல், ரிசர்வ் வங்கியின் பரிந்துரைப்படி, எச்.டி.எப்.சி., வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆதித்யா பூரி, இந்த ஆண்டு இறுதிக்குள் ஓய்வு பெறுவார்.

ஏற்கனவே, தனியார் துறை வங்கிகளான, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவற்றின் உயர் மட்ட பதவிகளில், ரிசர்வ் வங்கி மாற்றங்களைச் செய்துள்ளது.ரிசர்வ் வங்கியின் பரிந்துரை மூலம், வங்கியின் நிர்வாக குழு, அதன் நிறுவனர் குழுவின் அழுத்தங்கள் இன்றி செயல்பட முடியும் என கருதப்படுகிறது.நாளைக்குள் வங்கிகளின் பங்குதாரர்கள், தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி, ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)