இயர்போன்களில் எது சிறந்தது?இயர்போன்களில் எது சிறந்தது? ... ‘டிரான்ஸ்பரன்ட்’ முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனம் ‘டிரான்ஸ்பரன்ட்’ முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனம் ...
‘ஆங்கிலத்தை மறந்து விட்டு பிராந்திய மொழிகளுக்கு செல்லுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2020
21:59

மும்பை:‘ஆங்கிலத்தை மறந்து விட்டு, பிராந்திய மொழிகளுக்கு செல்லுங்கள்’ என, நிதி தொழில்நுட்ப நிறுவனங்களை, நிடி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்திய தொழிலக கூட்டமைப்பின் காணொலி கூட்டத்தில் பங்கேற்று பேசிய, அமிதாப் காந்த் மேலும் கூறியதாவது:பிராந்திய மொழிகளை கைக்கொள்வது, முன்னேறுவதற்கான வழியாகும்.

முயற்சிகள் வீணாகும்

நிதி சம்பந்தப்பட்ட தேவைகளை ஆங்கிலத்தில் மட்டுமே வழங்குவது என்றில்லாமல், பிராந்திய மொழிகளிலும் வழங்க வேண்டும். நிதி சேவைகளை, முழுக்க உள்ளூர் மயமாக்க வேண்டும். நிதித்துறை நிறுவனங்கள், பிராந்திய மொழிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளா விட்டால், முந்தைய முயற்சிகள் அனைத்தும் வீணாக நேரிடும். மேலும் மக்கள் அந்நியப்பட்டுவிடுவர்.

இந்தியாவில், நிதி சேவைகளை பயன்படுத்துபவர்கள் அதிகரித்து வருகின்றனர். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள், 36 சதவீதம் என்றிருந்த நிலையில், 2011லிருந்து அதிகரித்து, இன்று, 80 சதவீதமாகி இருக்கிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, தேவைப்படும் பிரிவினருக்கு டிஜிட்டல் முறையில் பணத்தை வழங்க முடியும் என்ற நிலைக்கு, இந்தியா உயர்ந்துள்ளது.

ஆனால், வெறுமனே சேமிப்பு கணக்கு துவங்குவது, நுண் கடன் வழங்குவது, நுண் காப்பீடு வழங்குவது ஆகியவற்றுடன் நின்றுவிடாமல், அதையும் தாண்டிச் செல்ல வேண்டும்.

கிராமப்புற பங்களிப்பு

நம் நாட்டில், போதிய விழிப்புணர்வு இல்லாததால், மூலதன சந்தைகளில், மக்களின் பங்கேற்பு மிகவும் குறைவாக இருக்கிறது. நகர்ப்புறங்களில் தான் அதிக முதலீட்டாளர்கள் உள்ளனர். மூலதன சந்தைகளை விரிவுபடுத்த, கிராமப்புற பங்களிப்பு அவசியம்.நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆங்கிலத்தை மட்டும் பயன்படுத்தாமல், பிராந்திய மொழிகளையும் பயன்படுத்த முன்வர வேண்டும். அப்போது தான், கிராமப்புற பங்களிப்பும் அதிகரிக்கும்.அதே நேரத்தில், முறையான நிதிச் சேவைகளின் பாதுகாப்பும் அதிகரிக்க அவை உதவும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)