பதிவு செய்த நாள்
17 ஜூன்2020
00:07
புதுடில்லி:அறிமுகம் செய்யப்பட்டு, 15 ஆண்டுகளில், ‘சுவிப்ட்’ கார் விற்பனை, 22 லட்சத்தை தாண்டியிருப்பதாக, ‘மாருதி சுசூகி’ நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மாருதி சுசூகி நிறுவனத்தின், ‘பிரீமியம் ஹேட்ச்பேக்’ வகை காரான, ‘சுவிப்ட்’ கடந்த 2005ம் ஆண்டு, அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த காரின் விற்பனை, இதுவரை, 22 லட்சத்தை தாண்டிவிட்டதாக, மாருதி தெரிவித்து உள்ளது.கடந்த, 14 ஆண்டுகளாக,
‘பிரீமியம் ஹேட்ச்பேக்’ பிரிவில், ‘நம்பர் ஒன்’ காராக, ‘சுவிப்ட்’ இருந்து வருவதாகவும், மாருதி தெரிவித்துள்ளது.
இது குறித்து, மாருதி சுசூகி நிறுவனத்தின், விற்பனை பிரிவின் நிர்வாக இயக்குனர் சஷாங்க் ஸ்ரீவத்ஸவா கூறியதாவது:‘ஹேட்ச்பேக்’ பிரிவில், உலக நாடுகளை சவாலுக்கு அழைத்த முதல் பிராண்டு, சுவிப்ட். இது ஒரு கார் என்பதை தாண்டி, புதிய சிந்தனையின் வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது. வலுவானதாகவும், சிக்கன மானதாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட காராகும் இது.
மூன்றாம் தலைமுறை, சுவிப்ட் கார், 30 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டதாக இருக்கிறது. கடந்த நிதியாண்டில், ‘பிரீமியம் ஹேட்ச்பேக்’ பிரிவில், ‘நம்பர் ஒன்’ கார் என்ற இடத்தையும் பிடித்துள்ளது.தற்கால பெரிய கார்களில் இருக்கும் வசதிகளை கொண்ட இந்த கார், இளைய தலைமுறையினரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|