பதிவு செய்த நாள்
17 ஜூன்2020
22:30
சென்னை:கரூர் வைஸ்யா வங்கி, ‘மாருதி சுசூகி’ தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, கடனுதவி செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து, இந்தியா முழுதும் உள்ள புதிய கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த கடனுதவி கிடைக்கும்.
வாடிக்கையாளர்களுக்கு, முதல் ஆறு மாத அவகாசத்துடனும், கவர்ச்சிகரமான வட்டி விகிதத்திலும் கடன் வசதி கிடைக்கும். இது குறித்து, கரூர் வைஸ்யா வங்கியின் தலைவர், ஜெ.நடராஜன் கூறியதாவது: மாருதி சுசூகி நிறுவனத்துடன் செய்துள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம், கார் வாங்க விரும்புபவர்களுக்கு விரைவில் கடனுதவி கிடைக்கும்.
வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெறும், 15 நிமிடங்களில் கடன் அனுமதியும், கடன் தொகை ஒரே நாளிலும் வழங்கப்படும். கடன் பெற விண்ணப்பிப்பதில் இருந்து, கடன் தொகையைப் பெறுவது வரை, முற்றிலும், ‘டிஜிட்டல்’ மயமாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, மாருதி சுசூகியின் விற்பனை பிரிவின் நிர்வாக இயக்குனர் சஷாங்க் ஸ்ரீவத்ஸவா கூறியதாவது:இந்தியாவில் விற்பனை செய்யப்படும், 80 சதவீத புதிய கார்களுக்கு, கடன் உதவி, வங்கிகளின் மூலம் வழங்கப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக அனைவரும் போராடி வரும் இந்த சூழலில், கரூர் வைஸ்யா வங்கியுடன் நாங்கள் மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தம் மூலமாக, வாடிக்கையாளர்கள் எளிதாக பணத் தேவையை பூர்த்தி செய்ய இயலும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|