பெரிய வங்கிகளில் கணக்கு தாவும் இந்திய நிறுவனங்கள் பெரிய வங்கிகளில் கணக்கு தாவும் இந்திய நிறுவனங்கள் ...  தாக்குதலை அடுத்து நிறுத்தப்பட்ட சீன இறக்குமதி, ‘ஆர்டர்’கள் தாக்குதலை அடுத்து நிறுத்தப்பட்ட சீன இறக்குமதி, ‘ஆர்டர்’கள் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கரூர் வைஸ்யா வங்கி – மாருதி ஒப்பந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2020
22:30

சென்னை:கரூர் வைஸ்யா வங்கி, ‘மாருதி சுசூகி’ தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, கடனுதவி செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து, இந்தியா முழுதும் உள்ள புதிய கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த கடனுதவி கிடைக்கும்.


வாடிக்கையாளர்களுக்கு, முதல் ஆறு மாத அவகாசத்துடனும், கவர்ச்சிகரமான வட்டி விகிதத்திலும் கடன் வசதி கிடைக்கும். இது குறித்து, கரூர் வைஸ்யா வங்கியின் தலைவர், ஜெ.நடராஜன் கூறியதாவது: மாருதி சுசூகி நிறுவனத்துடன் செய்துள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம், கார் வாங்க விரும்புபவர்களுக்கு விரைவில் கடனுதவி கிடைக்கும்.

வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெறும், 15 நிமிடங்களில் கடன் அனுமதியும், கடன் தொகை ஒரே நாளிலும் வழங்கப்படும். கடன் பெற விண்ணப்பிப்பதில் இருந்து, கடன் தொகையைப் பெறுவது வரை, முற்றிலும், ‘டிஜிட்டல்’ மயமாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


இது குறித்து, மாருதி சுசூகியின் விற்பனை பிரிவின் நிர்வாக இயக்குனர் சஷாங்க் ஸ்ரீவத்ஸவா கூறியதாவது:இந்தியாவில் விற்பனை செய்யப்படும், 80 சதவீத புதிய கார்களுக்கு, கடன் உதவி, வங்கிகளின் மூலம் வழங்கப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக அனைவரும் போராடி வரும் இந்த சூழலில், கரூர் வைஸ்யா வங்கியுடன் நாங்கள் மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தம் மூலமாக, வாடிக்கையாளர்கள் எளிதாக பணத் தேவையை பூர்த்தி செய்ய இயலும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)