பதிவு செய்த நாள்
18 ஜூன்2020
22:50
புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த பார்வையை, ‘நிலையானது’ என்ற நிலையிலிருந்து, ‘எதிர்மறை’ நிலைக்கு மாற்றி அறிவித்துள்ளது,‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ நிறுவனம்.
கடந்த, எட்டு ஆண்டுகளில் இல்லாத குறைவான மதிப்பீடு ஆகும் இது. மேலும், கொரோனா வைரஸ் தொற்று, நடப்பு ஆண்டின் வளர்ச்சி வாய்ப்புகளை கணிசமான பாதித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது. ‘பிட்ச்’ நிறுவனத்துக்கு முன்னதாக, இந்த மாதத்தின் துவக்கத்தில், மற்றொரு தர மதிப்பீட்டு நிறுவனமான ‘மூடீஸ்’ அமைப்பு, இந்தியாவின் மதிப்பீட்டை, 22 ஆண்டுகளில் இல்லாத வகையில், ‘பி.ஏ.ஏ-., – 2’ எனும் மிகக் குறைந்த முதலீட்டு தரத்துக்கு குறைத்து அறிவித்தது.
‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ நாட்டின் பொருளாதார நிலை குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:நடப்பு ஆண்டுக்கான நாட்டின் வளர்ச்சிக் கண்ணோட்டத்தை, கொரோனா வைரஸ் தொற்று, கணிசமாக பலவீனப்படுத்தியுள்ளது. அதிக பொது கடன் சுமையும் சவாலாக மாறிஉள்ளது. நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதம் அளவுக்கு குறையும். அடுத்த நிதியாண்டில், 9.5 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.
‘மூடீஸ்’ நிறுவனத்தைப் பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டில், நாட்டின் வளர்ச்சி, 4 சதவீதம் அளவுக்கு குறையும் என்றும்; அடுத்த நிதியாண்டில், 8.7 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காணும் என்றும் தெரிவித்துள்ளது.ஆசிய மேம்பாட்டு வங்கிஇதற்கிடையே, ஆசிய மேம்பாட்டு வங்கியும், நடப்பு நிதியாண்டில், நாட்டின் வளர்ச்சி, 4 சதவீதம் அளவுக்கு சுருங்கும் என தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு, வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் இல்லங்களுக்கு திரும்பியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நாட்டின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 4 சதவீதம் அளவுக்கு குறையும் என தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|