பதிவு செய்த நாள்
18 ஜூன்2020
22:52
புதுடில்லி:நாட்டின் மூலதன சந்தைகளில், ‘பி நோட்’ எனும், ‘பங்கேற்பு பத்திரங்கள்' மூலமாக செய்யப்பட்ட முதலீடு, மே மாத இறுதியில், 60 ஆயிரத்து, 27 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
சில முதலீட்டாளர்கள், தங்களை பதிவு செய்து, நேரடியாக, இந்திய மூலதன சந்தைகளில் முதலீடு செய்யாமல், அன்னிய முதலீட்டாளர்கள் மூலமாக முதலீடுகளை செய்வதுண்டு. அப்போது அவர்களுக்கு, அன்னிய முதலீட்டாளர்களால் வழங்கப்படுவது தான், பங்கேற்பு பத்திரங்களாகும்.
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ வழங்கியிருக்கும் தரவுகளின் படி, பங்கேற்பு பத்திரங்கள் மூலமாக, மூலதன சந்தைகளில் செய்யப்பட்டுள்ள முதலீடு, மே மாத இறுதி நிலவரப்படி, 60 ஆயிரத்து, 27 கோடி ரூபாயாகும்.இதுவே, கடந்த ஏப்ரல் மாத இறுதியில், பங்கேற்பு பத்திரங்கள் வாயிலான முதலீடு, 57 ஆயிரத்து, 100 கோடி ரூபாயாக இருந்தது. இருப்பினும், மார்ச் மாதத்தில், 15 ஆண்டுகளில் இல்லாத வகையில், முதலீடு, 48 ஆயிரத்து, 6 கோடி ரூபாயாக சரிந்து இருந்தது.
கடந்த, 2004ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், பங்கேற்பு பத்திரங்கள் வாயிலான முதலீடு, 44 ஆயிரத்து, 586 கோடி ரூபாயாக இருந்தது. அதன் பிறகு, நடப்பு ஆண்டில் தான் மிக குறைவாக இருந்தது.கடந்த மே மாத நிலவரப்படி, மொத்தம், 60 ஆயிரத்து, 27 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இதில், 49 ஆயிரத்து, 160 கோடி ரூபாய் பங்குகளிலும்; 10 ஆயிரத்து, 106 கோடி ரூபாய் கடன் பத்திரங்களிலும்; 159 கோடி ரூபாய் பொருள் வணிகத்திலும்; 103 கோடி ரூபாய் கலப்பின பத்திரங்களிலும் முதலீடு செய்யப்பட்டுஉள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|