பதிவு செய்த நாள்
18 ஜூன்2020
22:56
மும்பை:இந்திய பொருளாதாரம் மிக வேகமாக மீளும் என, எச்.டி.எப்.சி., வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான, ஆதித்யா பூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, வங்கி ஊழியர்களுக்கு அவர் அனுப்பி இருக்கும் மின்னஞ்சலில், மேலும் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, மிக வேகமாக மீளும். நாட்டின் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை, கொரோனா பாதிப்புக்கு முன் இருந்த நிலையை, மீண்டும் திரும்ப பெறுவது மிகவும் அவசியமாகும்.கொரோனா தாக்கம், வினியோகத்தையும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு தேவையையும் தடை செய்தது.
இருப்பினும், இந்தியாவின் எதிர்காலம் மற்றும் எச்.டி.எப்.சி., வங்கியின் பிரகாசமான எதிர்காலம் ஆகியவை குறித்து, நான் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.மொத்த உள்நாட்டு உற்பத்தியும், நாடும், மிக விரைவாக மீட்கப்படும். சந்தையில் நாம்,
எப்போதையும் விட வலுவான நிலையில், வைரஸ் தாக்கத்துக்குப் பிறகு வெளிப்படுவோம். இந்த கடினமான காலத்திலும், போனஸ், சம்பள அதிகரிப்பு ஆகியவற்றை வழங்கிய ஒரு சில நிறுவனங்களில், எச்.டி.எப்.சி., வங்கியும் ஒன்றாகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|