பதிவு செய்த நாள்
19 ஜூன்2020
21:33
மும்பை:அன்னிய முதலீடுகள் அதிகரித்தது, உலக சந்தைகளில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்தது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் விலை உயர்ந்தது உள்ளிட்ட காரணங்களால், இந்திய பங்குகள் சந்தைகள் உயர்வை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ வர்த்தகத்தின் இடையே, 640.32 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின், வர்த்தக இறுதியில், 523.68 புள்ளிகள் அதிகரித்து, 34731.73 புள்ளிகளில் நிலை பெற்றது. இது, 1.53 சதவீத உயர்வாகும்.இதைப் போலவே, தேசிய பங்குச் சந்தையின் ‘நிப்டி’ வர்த்தகத்தின் இறுதியில், 152.75 புள்ளிகள் அதிகரித்து, 10244.40 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 1.51 சதவீத உயர்வாகும்.நேற்றைய வர்த்தகத்தில், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள், 7 சதவீதம் அளவுக்கு உயர்வை சந்தித்தன.
இதையடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள், 6 சதவீதம் அளவுக்கு உயர்வை சந்தித்தன.மாறாக, இண்டஸ்இண்ட் பேங்க், எச்.சி.எல்., டெக், ஐடிசி, மகிந்திரா அண்டு மகிந்திரா, எச்.டி.எப்.சி., ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|