ஜியோவில் குவியும் முதலீடுகள் ஜியோவில் குவியும் முதலீடுகள் ...  எல்.ஐ.சி., பங்கு வெளியீடு நிதியமைச்சகம் தீவிரம் எல்.ஐ.சி., பங்கு வெளியீடு நிதியமைச்சகம் தீவிரம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கைகொடுத்த நம்பிக்கை உயர்ந்தன சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2020
21:33

மும்பை:அன்னிய முதலீடுகள் அதிகரித்தது, உலக சந்தைகளில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்தது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் விலை உயர்ந்தது உள்ளிட்ட காரணங்களால், இந்திய பங்குகள் சந்தைகள் உயர்வை சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ வர்த்தகத்தின் இடையே, 640.32 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின், வர்த்தக இறுதியில், 523.68 புள்ளிகள் அதிகரித்து, 34731.73 புள்ளிகளில் நிலை பெற்றது. இது, 1.53 சதவீத உயர்வாகும்.இதைப் போலவே, தேசிய பங்குச் சந்தையின் ‘நிப்டி’ வர்த்தகத்தின் இறுதியில், 152.75 புள்ளிகள் அதிகரித்து, 10244.40 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 1.51 சதவீத உயர்வாகும்.நேற்றைய வர்த்தகத்தில், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள், 7 சதவீதம் அளவுக்கு உயர்வை சந்தித்தன.


இதையடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள், 6 சதவீதம் அளவுக்கு உயர்வை சந்தித்தன.மாறாக, இண்டஸ்இண்ட் பேங்க், எச்.சி.எல்., டெக், ஐடிசி, மகிந்திரா அண்டு மகிந்திரா, எச்.டி.எப்.சி., ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)