பதிவு செய்த நாள்
20 ஜூன்2020
21:20
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த, 12ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 50 ஆயிரத்து, 764 கோடி டாலராக அதிகரித்துள்ளது என, இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது, இந்திய மதிப்பில், 38.33 லட்சம் கோடி ரூபாய் ஆகும். மேலும், இது இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத மிக அதிக உயர்வாகும். மதிப்பீட்டு வாரத்தில், அன்னிய பண மதிப்பு அதிகரித்த காரணத்தால், கையிருப்பு இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த, 12ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 50 ஆயிரத்து, 764 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கடந்த, 5ம் தேதியுடன் முடிவடைந்த இதற்கு முந்தைய வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 62 ஆயிரத்து, 61 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்து, 37.87 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து இருந்தது.
மதிப்பீட்டு வாரத்தில், வெளிநாட்டு பண இருப்பு, 510.6 கோடி டாலர் அதிகரித்து, 46 ஆயிரத்து, 874 கோடி டாலராக உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் மூலதன வரத்து, மற்றும் வர்த்தக பற்றாக்குறை குறைந்து வருவது ஆகியவை, அன்னிய செலாவணி இருப்பு அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.இருப்பினும், தங்கத்தின் இருப்பு மதிப்பு, 82.1 கோடி டாலர் அதிகரித்து, 3,317 கோடி டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் இது, 2.50 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|