பதிவு செய்த நாள்
20 ஜூன்2020
21:22
புதுடில்லி:‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 11 லட்சம் கோடி ரூபாயை தாண்டிஉள்ளது. மேலும், 11 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை தாண்டிய, முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையையும் நிகழ்த்தி உள்ளது.
கடந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாளான, வெள்ளியன்று, இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, மும்பை பங்குச் சந்தையில், 65 ஆயிரத்து, 477 கோடி ரூபாய் அதிகரித்தது. இதையடுத்து, இதன் மொத்த சந்தை மதிப்பு, 11.15 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், கடந்த வெள்ளியன்று, கடன் இல்லாத நிலையை எட்டியதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இதன் பங்குகள் விலை அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் இதன் விலை, 6.23 சதவீதம் அதிகரித்து, ஒரு பங்கின் விலை 1,759.50 ரூபாய் என்ற நிலையை எட்டியது. பங்குகள் விலை அதிகரித்ததை அடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பும் அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியது.இந்த ஆண்டில் மட்டும் இதுவரை, இந்நிறுவன பங்குகளின் விலை, 16.20 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் இறுதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் கடன், 1.61 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்நிலையில், ‘ஜியோ பிளாட்பார்ம்ஸ்’ நிறுவனத்தில் குவிந்த முதலீடுகள்; எரிபொருள் சில்லரை விற்பனை வணிகத்தின் பங்குகளை விற்பனை செய்தது ஆகியவற்றின் மூலம், 1.75 லட்சம் கோடி ரூபாயை திரட்டியது. இதனால், இந்நிறுவனம், கடனிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|