யப் டிவியின் ஸ்மார்ட் டிவி ஆபர் – முதல்வார வெற்றியாளர்யப் டிவியின் ஸ்மார்ட் டிவி ஆபர் – முதல்வார வெற்றியாளர் ...  கண்காணிக்கப்படும் சீனா: அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் கண்காணிக்கப்படும் சீனா: அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் ...
அதிக சந்தை மதிப்பு ரிலையன்ஸ் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2020
21:22

புதுடில்லி:‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 11 லட்சம் கோடி ரூபாயை தாண்டிஉள்ளது. மேலும், 11 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை தாண்டிய, முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையையும் நிகழ்த்தி உள்ளது.

கடந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாளான, வெள்ளியன்று, இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, மும்பை பங்குச் சந்தையில், 65 ஆயிரத்து, 477 கோடி ரூபாய் அதிகரித்தது. இதையடுத்து, இதன் மொத்த சந்தை மதிப்பு, 11.15 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், கடந்த வெள்ளியன்று, கடன் இல்லாத நிலையை எட்டியதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இதன் பங்குகள் விலை அதிகரித்தது.


மும்பை பங்குச் சந்தையில் இதன் விலை, 6.23 சதவீதம் அதிகரித்து, ஒரு பங்கின் விலை 1,759.50 ரூபாய் என்ற நிலையை எட்டியது. பங்குகள் விலை அதிகரித்ததை அடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பும் அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியது.இந்த ஆண்டில் மட்டும் இதுவரை, இந்நிறுவன பங்குகளின் விலை, 16.20 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் இறுதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் கடன், 1.61 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்நிலையில், ‘ஜியோ பிளாட்பார்ம்ஸ்’ நிறுவனத்தில் குவிந்த முதலீடுகள்; எரிபொருள் சில்லரை விற்பனை வணிகத்தின் பங்குகளை விற்பனை செய்தது ஆகியவற்றின் மூலம், 1.75 லட்சம் கோடி ரூபாயை திரட்டியது. இதனால், இந்நிறுவனம், கடனிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)