ஓய்வு கால பலன் பாதிப்பை   சரி செய்வது எப்படி? ஓய்வு கால பலன் பாதிப்பை சரி செய்வது எப்படி? ...  நெருக்கடிகள் தரும் பாடம் நெருக்கடிகள் தரும் பாடம் ...
வைப்பு நிதி முதலீட்டில் அறிய வேண்டிய இடர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2020
01:14

பொதுவாக, வைப்பு நிதி பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. இதில் குறிப்பிட்ட தொகையை, குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்வதால், என்ன பலன் கிடைக்கும் என்பதும் உறுதியாக தெரியும். ஆனால், எல்லா வகையான முதலீடுகளும் இடர் கொண்டவையே. முதலீட்டின் தன்மைக்கேற்ப இடரின் அளவு மட்டுமே வேறுபடும். அந்த வகையில், வைப்பு நிதி முதலீடு தொடர்பாக அறிந்திருக்க வேண்டிய இடர்கள்:

பணமாக்கம்:


தேவையான நேரத்தில் முதலீட்டை விலக்கி, பணமாக பெற்றுக் கொள்ளும் தன்மை முக்கியமானது. வைப்பு நிதியை எளிதாக பணமாக்கி கொள்ளலாம். ஆனால், முதிர்வு காலத்திற்கு முன் விலக்கி கொண்டால், வட்டி பலனுக்கு அபராதம் உண்டு. வரிச்சலுகைக்கான ஐந்தாண்டும் வைப்பு நிதி முதலீட்டை இடையே விலக்க முடியாது.

பாதுகாப்பு:


எந்த முதலீட்டிலும், அசல் மீதான பாதுகாப்பு முக்கியம். வைப்பு நிதியை பொறுத்தவரை, வங்கிகள் மீது நம்பிக்கை வைக்கலாம். ஆனால், எதிர்பாராத விதமாக வங்கிகள் திவாலானால், வைப்பு நிதி முதலீடு பாதிக்கப்படலாம். இது போன்ற நேரங்களில், 5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே காப்பீடு பாதுகாப்பு பொருந்தும்.

பணவீக்கம்:


வைப்பு நிதியில், முதலீடு காலம் முழுதும் நிர்ணயிக்கப்பட்ட வட்டி வருமானம் பெறலாம். ஆனால், பணவீக்கத்தை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இந்த பலன் குறையலாம். மேலும், வரி விதிப்பின் தாக்கத்தையும் சேர்த்துக் கொண்டால் இது இன்னும் அதிகமாகும்.

வட்டி விகிதம்:


வைப்பு நிதிகளில் வட்டி விகித இடர் உண்டு. குறைந்த வட்டி விகிதத்தில், நீண்ட காலத்திற்கு தொகையை முடக்கி வைக்க வேண்டியிருக்கலாம். குறிப்பாக ஐந்தாண்டு லாக் இன் காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு இது பொருந்தும். நிலையான வருமானம் நாடுபவர்களை இது பாதிக்கும்.

மறுமுதலீடு:


வட்டி விகிதம் குறையும் சூழலில், விரைவில் முதிர்வு பெறும் வைப்பு நிதி முதலீட்டை மறு முதலீடு செய்தால், குறைந்த வட்டி விகிதத்தில் புதுப்பிக்க வேண்டியிருக்கும். வைப்பு நிதிகளின் இந்த அம்சங்களையும் கருத்தில் கொண்டு, நிதி இலக்குகளுக்கு ஏற்ப முதலீட்டு வாய்ப்புகளை தீர்மானிக்க வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)