பதிவு செய்த நாள்
22 ஜூன்2020
01:16
கிரெடிட் கார்டு நிறுவனங்கள் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் கடன் வரம்பை குறைத்து வரும் நிலையில், இதனால் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதை உணர வேண்டும்.
கொரோனா பாதிப்புக்கு மத்தியில், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர் களின் கடன் தகுதியை மறுபரிசீலனை செய்து, அதற்கேற்ப கடன் வரம்பை குறைத்து வருகின்றன.கார்டு வாடிக்கையாளர்கள் பலர் இப்படி தங்கள் கடன் வரம்பு குறைக்கப்பட்டு இருப்பதை உணர்ந்திருக்கலாம்.
இதனால் கார்டு பயன்பாட்டில் மேலும் கவனம் தேவை என்பதோடு, கடன் பயன்பாட்டு அளவையும் கவனிக்க வேண்டும்.கடன் வரம்புக்கும், கார்டில் செலுத்த வேண்டிய தொகைக்குமான விகிதம் கடன் பயன்பாடு எனப்படுகிறது. இது அதிகமாக இருப்பது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.
தற்போது, கடன் வரம்பு கணிசமாக குறைக்கப்பட்டிருப்பதால், கார்டில் நிலுவைத் தொகை அதிகம் வைத்திருப்பவர்களின் கடன் பயன்பாடு அதிகரித்து, அதன் விளைவாக கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும்.எனவே, கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகை வைத்திருப்பவர்கள், அதில் முடிந்த அளவு தொகையை செலுத்தி, தங்கள் கடன் பயன்பாட்டு அளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அவசியம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|