பதிவு செய்த நாள்
24 ஜூன்2020
13:35
சென்னை: உலகம் முழுவதிலும் உள்ள, அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்க, 1 கோடி ரூபாய் வரை கல்விக் கடனுக்கு உடனடியாக அனுமதி வழங்கும் நடைமுறையை, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:உலகம் முழுவதிலும் உள்ள, அங்கீகாரம் பெற்ற, கல்லுாரிகள் மற்றும் பல்கலையில் படிக்க, கடன் வழங்குவதற்காக, 1 கோடி ரூபாய் வரை, கல்விக் கடனுக்கு உடனடி அனுமதி வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது.இத்தகைய உடனடி கல்விக் கடன் திட்டம், இந்த துறையிலேயே முதல் முறையாக வழங்கப்படுகிறது.வங்கியில், வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும், நிலையான வைப்புத் தொகைகளுக்கு எதிராக, முழுமையான டிஜிட்டல் நடைமுறையில், கல்விக் கடன்களை பெற முடியும்.
சேர்க்கையை உறுதி செய்ய, கல்வி நிறுவனத்திற்கு அனுமதிக் கடிதமும் வழங்க முடியும்.பொதுவான கல்விக் கடனில், அனுமதிக் கடிதத்தைப் பெற, சில வேலை நாட்கள் பிடிக்கும். இதற்காக, ஏராளமான ஆவணங்களுடன் வங்கிக் கிளைக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும். ஆனால், இந்தத் திட்டத்தில், ‘ஆன்லைன்’ மூலம் இருக்கும் இடத்திலிருந்தே அனுமதி கடிதத்தைப் பெற முடியும்.வருமான வரிச் சட்டம், 1961ன் படி, 8 ஆண்டுகள் வரை, உடனடி கல்வி கடன் தொகைக்கு, முழு வட்டி செலுத்த அனுமதிக்கப்பட்டு, அதற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|