பதிவு செய்த நாள்
24 ஜூன்2020
22:57
புதுடில்லி:கடந்த நிதியாண்டின், நான்காவது காலாண்டு, மற்றும் முழு ஆண்டு நிதிநிலை முடிவு அறிக்கைகளை வெளியிட, நிறுவனங்களுக்கு மேலும் ஒரு மாத கால அவகாசத்தை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ வழங்கி, அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள பல இடையூறுகளால், குறிப்பிட்ட கால அவகாசத்தில், நிறுவனங்களால், நிதிநிலை அறிக்கைகளை தயார் செய்து சமர்ப்பிக்க முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பல்வேறு நிறுவனங்கள், பட்டய கணக்காளர் நிறுவனங்கள் ஆகியோர் தரப்பிலிருந்து, கால அவகாசம் கேட்டு கோரிக்கை
வைக்கப்பட்டது.நிறுவனங்கள் தரப்பில், பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக, தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவுகள், துணை அலுவலகங்கள், துணை நிறுவனங்கள் உள்ளிட்டவை, சிவப்பு மண்டலத்தில் சிக்கிக் கொண்டதால், கணக்கு தணிக்கை செய்ய இயலாத நிலை என, பல்வேறு நடைமுறை சிக்கல்கள் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து, இந்த நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை, ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக, ‘செபி’ தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டின், நான்காவது காலாண்டுக்கும், முழு நிதியாண்டுக்கும் இந்த அவகாசத்தை,‘செபி’ வழங்கி
உள்ளது.இதற்கு முன், நிதிநிலை முடிவுகளை அறிவிக்க கடைசி நாள், ஜூன் 30ம் தேதியாக இருந்தது. தற்போது, ஒரு மாத கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.
வழக்கமாக, பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், தங்கள் முழு நிதியாண்டு முடிவுகளை,
நிதியாண்டு முடிந்த, 60 நாட்களுக்குள்ளாகவும், காலாண்டு முடிவுகளை, காலாண்டு முடிந்த, 45 நாட்களுக்குள்ளாகவும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|