பதிவு செய்த நாள்
24 ஜூன்2020
23:04
மும்பை:கடனிலிருந்து விடுபடும் நிலைக்கு வந்துவிட்டதை அடுத்து, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம், அதன், ‘ஜியோ பிளாட்பார்ம்ஸ்’ மற்றும், சில்லரை வணிகப் பிரிவு ஆகியவற்றை, தனி நிறுவனங்களாக்கி, புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் என, ‘பெர்ன்ஸ்டைன் ரிசர்ச்’ நிறுவனம்தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துஉள்ளதாவது;அண்மையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன், ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின், 24.7 சதவீத பங்குகளை
விற்பனை செய்து, 1.16 லட்சம் கோடி ரூபாயை ஈட்டியது.உரிமை பங்குகளை வெளியிட்டு, அதன் பின், 24.7 சதவீத பங்குகளையும் விற்பனை செய்த பின், கடனில்லாத நிலைக்கு,
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வந்துவிட்டது.
இதையடுத்து, அடுத்த மூன்றிலிருந்து, நான்கு ஆண்டுகளுக்குள், புதிய பங்கு வெளியீட்டின் மூலம், ஜியோ பிளாட்பார்ம்ஸ் மற்றும் சில்லரை விற்பனை வணிக பிரிவு ஆகியவற்றை பிரித்து, மேலும் அதிக பங்குதாரர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கிறோம்.அடுத்து, ‘அராம்கோ’ நிறுவனத்துக்கு பங்குகளை விற்பனை செய்வது குறித்தும் பேச்சு நடைபெற்று வருகிறது. அராம்கோ நிறுவனத்துக்கு, ஐந்தில் ஒரு பங்குகள் விற்பனை செய்யப்படும் என கருதப்படுகிறது.
கைவசம் அதிக பணம் சேரும் நிலையில், ரிலையன்ஸ், அதன் இன்டர்நெட் மற்றும் சில்லரை வணிகத்தில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளக்கூடும். அராம்கோ துணையுடன், பெட்ரோகெமிக்கல் வணிகம் விரிவுபடுத்தப்படும். வேறு சில கடன்களையும் அடைக்கும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|