பதிவு செய்த நாள்
25 ஜூன்2020
22:06
புதுடில்லி:வீடுகள் விற்பனை, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், 81 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும் என்றும், புதிய அறிமுகங்கள், 98 சதவீதம் அளவுக்கு குறைந்துவிடும் என்றும், சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘அனராக்’ தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள முக்கியமான நகரங்களில், கடந்த ஆண்டு, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், 68 ஆயிரத்து, 600 வீடுகள் விற்பனை ஆகியிருப்பதாக, இந்நிறுவனம் தெரிவித்துஉள்ளது.இதே போல், கடந்த ஆண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், 69 ஆயிரம் புதிய வீடுகள் விற்பனைக்கு வந்திருந்த நிலையில், நடப்பு ஆண்டில், இதே
காலத்தில், 98 சதவீதம் சரிவு கண்டு, 1,390 புதிய வீடுகள் மட்டுமே விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கின்றன என்றும், ‘அனராக்’தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் அனுஜ் புரி தெரிவித்துள்ளதாவது: வீடுகள் விற்பனை மற்றும் புதிய வீடுகள் வரத்து ஆகியவை, கடுமையான சரிவைக் கண்டுள்ளன. நாடு முடக்கப்பட்ட நிலையில், இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.ஒருகட்டத்திற்குப் பிறகு, தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, வீடுகளை விற்பனை செய்யும் முயற்சிகள் பல நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டன.
தொழில்நுட்பம் நன்றாக கைகொடுத்ததை அடுத்து, இப்போது பல நிறுவனங்கள், டிஜிட்டல் விற்பனையில் தங்களை வலுப்படுத்திக் கொண்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.சென்னையைப் பொறுத்தவரை, விற்பனை, 84 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும் என எதிர்பார்க்கப்படுவதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|