பதிவு செய்த நாள்
26 ஜூன்2020
22:36
புதுடில்லி:சீன மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான, ‘சயோமி’ அதன் சில்லரை விற்பனை கடைகளின் விளம்பரப் பலகைகளில், ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ எனும் வாசகத்தை இடம் பெறச் செய்யும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
எல்லை பிரச்னை காரணமாக, இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, சீன பொருட்களை புறக்கணிக்கும் மனநிலை, நாட்டில் அதிகரித்து வருகிறது.
காழ்ப்புணர்ச்சி
இந்நிலையில், சில்லரை விற்பனை கடைகள் மீது, சிலர் காழ்ப்புணர்ச்சியைக் காட்டக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளதை அடுத்து, சயோமி நிறுவனம், இத்தகைய முயற்சியை மேற்கொண்டு இருப்பதாக, அகில இந்திய மொபைல் சில்லரை விற்பனையாளர்கள் சங்கமான, ஏ.ஐ.எம்.ஆர்.ஏ., தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்த சங்கத்தின் தலைவர் அரவிந்த் குரானா மேலும் கூறியதாவது:சில இடங்களில்,சில்லரை விற்பனை கடைகளில் நுழைந்து, கடைகளை தாக்கி விடுவோம் என்றும், சீனப் பொருட்களை அகற்றி விடுமாறும் சிலர் மிரட்டிச் சென்றுள்ளனர். இதனால், சில்லரை விற்பனையாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சில்லரை விற்பனை கடைகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பது குறித்து, சீன பிராண்டு நிறுவனங்களுக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம்.
எங்கள் கடிதத்தில், சில்லரை விற்பனையாளர்கள் சிறிது காலத்துக்கு பிராண்டு விளம்பர பலகையை மூடி வைக்கவோ அல்லது கழற்றி விடவோ அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டு உள்ளோம்.இந்நிலையில், சயோமி நிறுவனம், கடை விளம்பர பலகைகளில், பிராண்டு பெயருக்கு கீழே, ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ என்ற வாசகத்தை, வெள்ளை வண்ணத்தில் இடம் பெறச் செய்யும் முயற்சியை துவக்கி உள்ளது.
மற்ற நிறுவனங்கள் இது குறித்து இன்னும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால், அவை நிலைமையைஉன்னிப்பாக கவனித்து வருகின்றன.
கூடுதல் ஆதரவு
வாடிக்கையாளர்களை பொறுத்தவரை, சீன தயாரிப்புகளுக்குப் பதிலாக, வேறு பிராண்டுகளை காட்டச் சொல்கின்றனர். இதனால், ‘சாம்சங்’ நிறுவனம் பயனடைகிறது. சீன பிராண்டு அல்லாத பெரிய பிராண்டு இது ஒன்று தான். சீன அரசு, அந்நாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவைவழங்குவதை போல, இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவிப்பதில், அரசு இன்னும் அதிக கவனம் எடுத்து, கூடுதல் ஆதரவை வழங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|