பதிவு செய்த நாள்
27 ஜூன்2020
21:56
புதுடில்லி:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பிரிவைச் சேர்ந்த, 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு, அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், கடன் வழங்கப்பட்டுள்ளதாக, எஸ்.பி.ஐ., வங்கி தெரிவித்துள்ளது.
உலக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தினத்தை ஒட்டி, எஸ்.பி.ஐ., வங்கியின் நிர்வாக இயக்குனர் சி.எஸ்., ஷெட்டி, வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுடனான காணொலி மூலமான கூட்டத்தில் கூறியதாவது: குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பிரிவை சேர்ந்த,
4 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு, அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், கடன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 1ம் தேதியன்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், இதுவரை, நாடு முழுதும், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.இந்த அவசரகால கடன் உத்தரவாத திட்டத்திற்காக, 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட தேதி முதல், அக்டோபர், 31 வரையிலான காலகட்டத்தில், இந்த திட்டத்தின் கீழ், கடன்கள் வழங்கப்படும். அல்லது, 3 லட்சம் கோடி ரூபாய் தீரும் வரை வழங்கப்படும்.
இதில் எது விரைவில் முடிகிறதோ, அதுவரை கடன் வழங்கப்படும். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், இந்த திட்டத்தின் மூலம் உத்தரவாதம் எதுவும் தரத் தேவையின்றி, கடன் பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|