பதிவு செய்த நாள்
27 ஜூன்2020
21:59
புதுடில்லி:இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், சீன முதலீடுகள், கடந்த, 4 ஆண்டுகளில், 12 மடங்கு அதிகரித்து, 34 ஆயிரத்து, 730 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
தரவுகள் பகுப்பாய்வு நிறுவனமான, ’குளோபல் டேட்டா’ தெரிவித்திருப்பதாவது:இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், கடந்த, 4 ஆண்டுகளில், சீன முதலீடுகள், 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
உயர்வு
இதனையடுத்து, கடந்த ஆண்டில், சீன முதலீடுகள், கிட்டத்தட்ட, 34 ஆயிரத்து, 730 கோடி ரூபாய் என்ற அளவை தொட்டுள்ளது.கடந்த, 2016 ல், சீன முதலீடு, 381 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது, 2,877 கோடி ரூபாய் என்பதிலிருந்து அதிகரித்து, 2019 ல், 4.6 பில்லியன் அமெரிக்க டாலராக, அதாவது, 34 ஆயிரத்து, 730 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
இந்தியாவில் உள்ள, 100 கோடி டாலருக்கு மேல் மதிப்பு கொண்ட, ’யுனிகார்ன்’ நிறுவனங்களில், பெரும்பாலானவற்றுக்கு, சீனாவிலிருந்தே முதலீடுகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக, ’அலிபாபா’ மற்றும் ’டென்சென்ட்’ ஆகிய நிறுவனங்களிலிருந்து முதலீடுகள் பெறப்பட்டுள்ளன.
’அலிபாபா’ மற்றும் அதன் துணை நிறுவனமான, ’ஆன்ட் பைனான்ஷியல்’ ஆகிய நிறுவனங்கள், இந்தியாவின் முக்கியமான நான்கு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன. பேடிஎம், ஸ்நாப்டீல், பிக்பாஸ்கெட், ஸொமாட்டோ ஆகிய நிறுவனங்களில் இவை, 19 ஆயிரத்து, 630 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்துள்ளன.
5 நிறுவனங்கள்’
டென்சென்ட்’ மற்ற நிறுவனங்களுடன் இணைந்து, ஓலா, ஸ்விகி, ஹைக், ட்ரீம் 11 மற்றும் பைஜு இந்தியா ஆகிய 5 நிறுவனங்களில், 18 ஆயிரத்து, 120 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.இந்தியாவில், மொத்தமுள்ள, 24 யுனிகார்ன் நிறுவனங்களில், 17 நிறுவனங்கள், சீன முதலீடை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு குளோபல் டேட்டா தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|