கைகொடுக்கட்டும் கைப்பிடிச் சேமிப்புகள்! கைகொடுக்கட்டும் கைப்பிடிச் சேமிப்புகள்! ...  வரி சலுகை முதலீடு குழப்பத்திற்கு தீர்வு வரி சலுகை முதலீடு குழப்பத்திற்கு தீர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தங்க நகை கடன் : தேவை அதிகரிப்பது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2020
00:49

வங்கிகள் மற்ற வகை கடன் வழங்குவதில் தயக்கம் காட்டினாலும், தங்க நகை கடன்களை அதிக அளவில் வழங்கத் துவங்கியிருப்பது, நிதி தேவை உள்ளவர்களுக்கு வாய்ப்பாக அமைகிறது.

‘லாக்டவுன்’ காரணமாக, பெரும்பாலான வர்த்தகங்கள் முடங்கியுள்ள நிலையில், வங்கிகள் கடன் வழங்குவதில் எச்சரிக்கையான அணுகுமுறையை கடைப்பிடிக்கின்றன. இதனால், தனிநபர் கடன் பெறுவதற்கான செயல்முறை மற்றும் நிபந்தனைகள் கடினமாகி இருக்கிறது. கடனை திரும்பிச் செலுத்தும் ஆற்றலை கவனமாக பரிசீலித்த பிறகே, கடன் வழங்க வங்கிகள் முன்வருகின்றன. அதே நேரத்தில், தங்க நகை மீது கடன் வழங்குவதில் வங்கிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.


இது, பணத்தேவை உள்ளவர்களுக்கும் சாதகமாக அமைந்துள்ளது.எளிய செயல்முறை வேலையிழப்பு, சம்பள குறைப்பு போன்றவை அதிகரித்துள்ள நிலையில், வங்கிகள் கடன் வழங்குவதில் இயல்பாகவே தயக்கம் காட்டுகின்றன. கிரெடிட் கார்டு நிறுவனங்களும் கார்டுதாரர்களின் கடன் வரம்பை குறைத்து வருகின்றன. கடன் பெறுபவரிடம் ஈட்டுறுதி பெறுவதில் வங்கிகள் உறுதியாக உள்ளன.


இந்த சூழலில், தங்க நகை மீது கடன் பெறுவது எளிதாக அமைகிறது. வங்கிகளைப் பொருத்த வரை, தங்க நகை மீது கடன் அளிப்பது பாதுகாப்பாகவும் அமைகிறது. கடனுக்கான ஈட்டுறுதி யாக தங்க நகை இருப்பதால், கடன் தொடர்பான இடரும் குறைகிறது.கடன் பெறுபவர்களை பொருத்தவரை, தங்க நகை மீது கடன் பெறுவது எளிதானதாக இருக்கிறது. மற்ற வகை கடன்கள் எனில், தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பது, நிபந்தனைகளை நிறைவேற்றுவது போன்ற செயல்முறைகளை மேற்கொண்டாக வேண்டும்.


அப்போதும் கூட, கடனுக்கான அனுமதி கிடைக்கும் என்பது நிச்சயம் இல்லை. ஆனால், தங்க நகை கடன் எனும் போது, உரிய அளவு நகையை அடமானம் வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான செயல்முறையும் எளிது.பாதுகாப்பான கடன்எனவே, குறுகிய கால அளவுக்கு கடன் தேவை உள்ளவர்கள் தங்க நகை கடனை நாடுகின்றனர்.

தங்கத்தின் மதிப்பில், 75 சதவீதம் வரை கடன் வழங்கப்படுகிறது. வட்டியை முதலில் செலுத்துவது, அசல்-, வட்டி இரண்டையும் மாதத் தவணையாக செலுத்துவது என்று திரும்பி செலுத்துவதற்கும் பலவிதமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. கடனுக்கான வட்டி விகிதமும் குறைவானது. லாக் டவுன் முடிந்து வர்த்தகம் துவங்க விரும்பும் சிறு மற்றும் குறு தொழில் நிறுவன அதிபர்களும் தங்க நகை கடனை நாடுவதை விரும்புகின்றனர்.

வங்கிகளும் தங்க நகை கடனை பாதுகாப்பாக கருதுவதால், இந்த அதிகரிக்கும் தேவைக்கு ஈடு கொடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. பல வங்கிகள் தங்க நகை கடனுக்கான விசேஷ திட்டங்களையும் அறிவித்துள்ளன. இந்நிலையில், தங்கத்தின் விலையும் உயர்ந்து வருவது, தங்கத்தின் மதிப்பை உயர்த்தி, தங்க நகை கடன் வாய்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


கடன் பெற விரும்பிகிறவர்களும் அதிக தொகை பெறும் சாத்தியம் உள்ளது.எனினும், தங்க நகை கடன் குறுகிய கால கடன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொதுவாக ஆறு மாதங்கள் முதல், இரண்டு ஆண்டு வரை இந்த கடன் வழங்கப்படுகிறது. அவசரத்தேவையை நிறைவேற்றிக்கொள்ள இந்த கடன் வசதி ஏற்றது. பண வரவு சரியாகும் வரை நிலைமைய சமாளிக்க அல்லது வங்கி கடன் கிடைகும் வரையான பணத்தேவைக்கு இந்த கடனை நாடலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)