பதிவு செய்த நாள்
29 ஜூன்2020
00:56
தொழில்நுட்பம்
எல்லாத் துறைகளிலும் வேகமான மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில்,
நிதித்துறையில் பின் டெக் எனப்படும் நிதி நுட்ப நிறுவனங்களும், அவற்றின்
தொடர்ச்சியாக ’நியோ’ வங்கிகள் எனப்படும் புது யுக வங்கிகளும் அறிமுகமாகி
வருகின்றன. நியோ வங்கிகள் என்றால் என்ன?, அவை வழக்கமான வங்கிகளில் இருந்து
எப்படி வேறுபடுகின்றன? அவை அளிக்கும் பலன்கள் என்ன என்பது பற்றி
பார்க்கலாம்:
நிதி நுட்ப வங்கிகள்:
பல்வேறு வகையான வங்கிகள் இருக்கின்றன.
அந்த வகையில் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட நிதி நுட்ப ஸ்டார்ட் அப்
நிறுவனங்கள் நியோ வங்கிகளை துவக்கி மேம்பட்ட சேவை அளிக்க முயல்கின்றன.
ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவி உள்ளிட்ட நுட்பங்களை இவை பயன்படுத்தி
சேவை அளிக்கின்றன.
என்ன வேறுபாடு?
நியோ வங்கிகள் டிஜிட்டல் சேவைகளை
பிரதானமாக வழங்குகின்றன என்பதோடு, இவை முழுக்க முழுக்க ஆன்லைனில்
செயல்படுபவை. வழக்கமான வங்கிகள் போல இவற்றுக்கு பவுதீக அலுவலகங்கள்
கிடையாது. எனினும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு காரணமாக இவை, வழக்கமான
வங்கிகளுடன் இணைந்து சேவை அளிக்கின்றன.
சேவைகள் என்ன?
நியோ வங்கிகள்,
குறைந்த செலவிலான வர்த்தக மாதிரியை கொண்டுள்ளன. இவை அளிக்கும் வங்கிச்
சேவைகளுக்கு குறைந்த கட்டணமே கொண்டிருக்கும் அல்லது கட்டணம் இல்லாமல்
இருக்கும். மேலும் செயற்கை நுண்ணறிவு ஆய்வு மூலம், வாடிக்கையாளர்களுக்கு
ஏற்ற சேவை அளிக்கின்றன.
தொழில்நுட்ப சேவை:
தொழில்நுட்பத்தை அடிப்படையாக
கொண்டு இந்த வங்கிகள் சேவை அளிக்கின்றன. செலவிடும் போது,
வாடிக்கையாளர்களின் பட்ஜெட் பற்றியும் எச்சரிக்கை குறிப்பு அனுப்புகின்றன.
மேலும், வாடிக்கையாளர் கணக்கில் உபரி இருப்பு இருந்தால், முதலீடு
தொடர்பாகவும் ஆலோசனை அளிக்கின்றன.
யாருக்கு ஏற்றது?
இந்தியாவில் இப்போது
தான் நியோ வங்கிகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. பினின், நியோ (NiYO),
யெலோ ஆகியவை இந்த பிரிவில் இயங்குகின்றன. தொழில்நுட்பம் சார்ந்தவை
என்பதால், இந்த வங்கிகள், இளம் தலைமுறையினரை இலக்காக கொண்டு
செயல்படு கின்றன. டிஜிட்டல் சேவைகள், தொழில்நுட்ப பரிச்சயம் கொண்டவர்களுக்கு
ஏற்றதாக இருக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|