தங்க நகை கடன்  : தேவை அதிகரிப்பது ஏன்? தங்க நகை கடன் : தேவை அதிகரிப்பது ஏன்? ... வட்டி விகிதத்தை மாற்றாத தபால்துறை வட்டி விகிதத்தை மாற்றாத தபால்துறை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
புதிய வரவான, ‘நியோ’ வங்கிகள் அளிக்கும் பலன்கள் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2020
00:56

தொழில்நுட்பம் எல்லாத் துறைகளிலும் வேகமான மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், நிதித்துறையில் பின் டெக் எனப்படும் நிதி நுட்ப நிறுவனங்களும், அவற்றின் தொடர்ச்சியாக ’நியோ’ வங்கிகள் எனப்படும் புது யுக வங்கிகளும் அறிமுகமாகி வருகின்றன. நியோ வங்கிகள் என்றால் என்ன?, அவை வழக்கமான வங்கிகளில் இருந்து எப்படி வேறுபடுகின்றன? அவை அளிக்கும் பலன்கள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்:

நிதி நுட்ப வங்கிகள்:


பல்வேறு வகையான வங்கிகள் இருக்கின்றன. அந்த வகையில் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட நிதி நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நியோ வங்கிகளை துவக்கி மேம்பட்ட சேவை அளிக்க முயல்கின்றன. ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவி உள்ளிட்ட நுட்பங்களை இவை பயன்படுத்தி சேவை அளிக்கின்றன.

என்ன வேறுபாடு?


நியோ வங்கிகள் டிஜிட்டல் சேவைகளை பிரதானமாக வழங்குகின்றன என்பதோடு, இவை முழுக்க முழுக்க ஆன்லைனில் செயல்படுபவை. வழக்கமான வங்கிகள் போல இவற்றுக்கு பவுதீக அலுவலகங்கள் கிடையாது. எனினும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு காரணமாக இவை, வழக்கமான வங்கிகளுடன் இணைந்து சேவை அளிக்கின்றன.

சேவைகள் என்ன?


நியோ வங்கிகள், குறைந்த செலவிலான வர்த்தக மாதிரியை கொண்டுள்ளன. இவை அளிக்கும் வங்கிச் சேவைகளுக்கு குறைந்த கட்டணமே கொண்டிருக்கும் அல்லது கட்டணம் இல்லாமல் இருக்கும். மேலும் செயற்கை நுண்ணறிவு ஆய்வு மூலம், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சேவை அளிக்கின்றன.

தொழில்நுட்ப சேவை:


தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு இந்த வங்கிகள் சேவை அளிக்கின்றன. செலவிடும் போது, வாடிக்கையாளர்களின் பட்ஜெட் பற்றியும் எச்சரிக்கை குறிப்பு அனுப்புகின்றன. மேலும், வாடிக்கையாளர் கணக்கில் உபரி இருப்பு இருந்தால், முதலீடு தொடர்பாகவும் ஆலோசனை அளிக்கின்றன.

யாருக்கு ஏற்றது?


இந்தியாவில் இப்போது தான் நியோ வங்கிகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. பினின், நியோ (NiYO), யெலோ ஆகியவை இந்த பிரிவில் இயங்குகின்றன. தொழில்நுட்பம் சார்ந்தவை என்பதால், இந்த வங்கிகள், இளம் தலைமுறையினரை இலக்காக கொண்டு செயல்படு கின்றன. டிஜிட்டல் சேவைகள், தொழில்நுட்ப பரிச்சயம் கொண்டவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)