பதிவு செய்த நாள்
30 ஜூன்2020
22:53
புதுடில்லி:தொழில் துறை தொழிலாளர்களுக்கான, நுகர்வோர் விலை குறியீட்டு எண்
அடிப்படையிலான பணவீக்கம், 5.1 சதவீதமாக குறைந்துள்ளது.
சில உணவுப் பொருட்கள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை குறைந்திருந்தது, இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இது குறித்து, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளதாவது:அனைத்து பொருட்களின்
அடிப்படையிலான பணவீக்கம், 2020 மே மாதத்தில், 5.10 சதவீதமாக இருந்தது. இது, அதற்கு முந்தையமாதமான ஏப்ரலில், 5.45 சதவீதமாக இருந்தது.
மேலும், முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், அதாவது, 2019 மே மாதத்தில், 8.65
சதவீதமாகவும் இருந்தது.இதேபோல், உணவு பணவீக்கம், மே மாதத்தில், 5.88 சதவீதமாக
உள்ளது. இது, கடந்த ஏப்ரல் மாதத்தில், 6.56 சதவீதமாக இருந்தது. இதுவே, 2019 மே மாதத்தில், 5.21 சதவீதமாக இருந்தது.
மேலும், கடந்த மே மாதத்துக்கான, தொழில் துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய
சில்லரை விலை பணவீக்கம், 1 புள்ளி அதிகரித்து, 330 ஆக இருந்தது.ஏப்ரல் மாதத்துடன்
ஒப்பிடும்போது, சதவீத அடிப்படையில், 0.30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவே, இதற்கு
முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 0.64 சதவீதம் அதிகரித்து
உள்ளது.
இது குறித்து, தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறியதாவது:நாடு
முடக்கப்பட்ட நிலையில், ‘பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தின் கீழ், நாடு முழுதும் உள்ள வீடுகளுக்கு,இலவசமாக தானியங்கள் வழங்கப்படுவதால், உணவு பணவீக்கம்வீழ்ச்சியடைந்துள்ளது.இவ்வாறு அவர்கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|