பதிவு செய்த நாள்
01 ஜூலை2020
22:58
புதுடில்லி:சவுதி அரேபியா, அடிப்படை பொருட்களுக்கான மதிப்புக் கூட்டல் வரியை, நேற்று முதல், மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது.
வரி அதிகரிக்கும் என்பதால், கடந்த சில நாட்களில், அந்நாட்டு மக்கள், தங்கம், வீட்டு சாதனங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றை அதிக அளவில் வாங்கிஇருக்கின்றனர்.கொரோனா தாக்கம் காரணமாகவும், கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாகவும்,
சவுதியின் பொருளாதாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிஇருக்கிறது.
இதை சரி செய்யும் வகையில், மதிப்புக் கூட்டல் வரியை, 5 சதவீதத்திலிருந்து, 15 சதவீதமாக உயர்த்தி உள்ளது, சவுதி அரசு.இந்த வரி அதிகரிப்பு, நேற்று முதல் அமலுக்கு வந்துஉள்ளது.
வரி அதிகரிக்கும் என்பதால், மக்கள், தங்கம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வீட்டு சாதனங்கள் போன்றவற்றை, புதன்கிழமைக்கு முன்னதாகவே வாங்கி குவித்து உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|