பதிவு செய்த நாள்
01 ஜூலை2020
23:00
புதுடில்லி:நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, ஜூன் மாதத்தில் ஓரளவு
முன்னேற்றத்தை சந்தித்துள்ளது. இருப்பினும், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு
காரணமாக, வணிக நிலைமை தொடர்ந்து பாதிப்புக்குஉள்ளாகி இருப்பதாக தெரியவந்துள்ளது.
பிரிட்டனை சேர்ந்த, ‘ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளை சேர்ந்த, 400 நிறுவனங்களின், ஜூன் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:இந்தாண்டு, ஜூன் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, ‘பி.எம்.ஐ.,’ குறியீடு, 47.2 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, கடந்த மே மாதத்தில், 30.8 புள்ளிகளாக இருந்தது. ‘பி.எம்.ஐ.,’ குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.
ஜூன் மாதத்தில், இக்குறியீடு, 47.2 புள்ளிகளாக குறைந்திருப்பினும், மே மாதத்துடன் ஒப்பிடும்போது, ஓரளவு வளர்ச்சி நிலை திரும்பி வருவதாக தெரிகிறது.
இருப்பினும், தொடர்ந்து மூன்றாவது மாதமாக வளர்ச்சி குறைந்தே உள்ளது. தொடர்ந்து, 32 மாதங்களாக வளர்ச்சிப் போக்கில் இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில், வளர்ச்சி சரியத் தொடங்கியது.மே மாத நிலவரத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்திய உற்பத்தி துறை, ஜூன் மாதத்தில் ஓரளவு நிலைத் தன்மைக்கு திரும்பி வந்துள்ளது தெரிகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு ஆகிய காரணங்களால், தேவைகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் நிலையில், பொருளாதார மீட்சி மேலும் தாமதமாகும்.
எலியட் கெர்
பொருளாதார நிபுணர், ஐ.எச்.எஸ்., மார்கிட்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|