பதிவு செய்த நாள்
01 ஜூலை2020
23:02
புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனும் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வசூல், கடந்த ஜூன்
மாதத்தில், 90 ஆயிரத்து, 917 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதுவே, கடந்த மே மாதத்தில், 62 ஆயிரத்து, 9 கோடி ரூபாயாகவும், ஏப்ரல் மாதத்தில்,
32 ஆயிரத்து, 294 கோடி ரூபாயாகவும் இருந்தது. ஏப்ரல், மே மாத வசூல் வருவாயுடன்
ஒப்பிடும்போது, ஜூன் மாதத்தில்அதிகரித்துள்ளது.இருப்பினும், கடந்த ஆண்டு, இதே ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, 9 சதவீதம் குறைவாகும்.
இதேபோல், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டை பொறுத்தவரை, ஜி.எஸ்.டி., வசூல், கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, 59 சதவீதம் சரிவைக்
கண்டுள்ளது. இந்த சரிவுக்கு முக்கிய காரணம், கொரோனா பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்டது தான்.
இது குறித்து, நிதியமைச்சகம் தெரிவித்திருப்பதாவது:ஜி.எஸ்.டி., வரி வசூலை பொறுத்தவரை, இரண்டு காரணங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் தொற்றுநோய் பரவலின் தாக்கத்தால், பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு, வருவாய் பாதிக்கப்பட்டது.அடுத்து, தொற்று நோய் பரவல் காரணமாக, வருமானத்தை தாக்கல் செய்வதிலும், வரி செலுத்துவதிலும்
அரசாங்கம் அளித்த தளர்வுகள் காரணமாகவும் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கடந்த மூன்று மாதங்களின் புள்ளிவிபரங்கள் அடிப்படையில் பார்க்கும்போது, ஜி.எஸ்.டி., வருவாய் மீட்சி அடைந்து வருவதை காணமுடிகிறது.இவ்வாறு நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|