பதிவு செய்த நாள்
02 ஜூலை2020
22:37
புதுடில்லி:ஊரடங்குகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், பல துறைகளில் செயல்பாடுகள் திரும்பிக் கொண்டிருந்தாலும், விருந்தோம்பல் மற்றும் ஓட்டல் துறைகள் பழைய நிலைக்கு திரும்புவதற்கு, அதிக காலம் பிடிக்கும் என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்து
உள்ளது.
உலகளவிலான சொத்து ஆலோசனை நிறுவனமான, ஜே.எல்.எல்., நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில், ஓட்டல் துறையில், பழைய வருவாயை எட்டுவதற்கு, இரண்டு
ஆண்டுகள் வரை ஆகும் என அத்துறையினர் கருதுவது தெரியவந்துள்ளது.
ஜே.எல்.எல்., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கொரோனா பரவலால், மற்ற துறைகளை விட, விருந்தோம்பல், சுற்றுலா, பயணம் ஆகிய துறைகள் மிகவும் அதிக
பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.கணக்கெடுப்பின்படி, ஓட்டல் துறையை சேர்ந்த, 20 சதவீதம் பேர், கடந்த ஆண்டு இருந்த வருவாய் நிலையை மீண்டும் எட்ட, 6 முதல், 12 மாதங்கள் ஆகும் என தெரிவித்துஉள்ளனர்.
மேலும், 60 சதவீதம் பேர், பழைய வருவாயை திரும்பப் பெற, இப்போதிலிருந்து, 13 முதல் 24 மாதங்கள் வரை ஆகும் என தெரிவித்துள்ளனர்.ஆடம்பர ஓட்டல் பிரிவினரில் பலர், வளர்ச்சி மெதுவாகவே இருக்கும் என்றும், கடந்த ஆண்டு நிலையை எட்ட இன்னும் இரண்டு
ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும்தெரிவித்துள்ளனர்.நிறுவனங்கள், பயணங்களுக்கு செலவு செய்வதை கணிசமாக குறைத்து வருவதால், ஆடம்பர ஓட்டல்களுக்குப் பதிலாக மத்திய தர ஓட்டல்களுக்கு அதிகம் பேர் செல்லக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மாநில அரசுகள் அனுமதிக்கும் பட்சத்தில், இரண்டு வாரங்களில் ஓட்டல்களை திறப்போம் என, 47 சதவீதம் பேரும், ஒரே வாரத்தில் துவங்குவோம் என,
33 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|