பதிவு செய்த நாள்
03 ஜூலை2020
22:43
புதுடில்லி:கடந்த ஜூன் மாதத்தில், நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, தொடர்ந்து, நான்காவது மாதமாக சரிவைக் கண்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, வணிகச் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளானது; புதிய ஆர்டர்கள் குறைந்தது போன்ற காரணங்களால், சரிவு நிகழ்ந்துள்ளது.
‘ஐ.எச்.எஸ்., – மார்க்கிட்இந்தியா’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
கடந்த ஜூன் மாதத்தில், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், ‘ஐ.எச்.எஸ்., – ஐ.எச்.எஸ்., மார்க்கிட் எஸ்.பி.எம்.ஐ.,’ குறியீடு, 33.7 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாகவே, இக்குறியீடு சரிந்து வருகிறது. இருப்பினும், மே மாதத்துடன் ஒப்பிடும்போது, சற்று வளர்ச்சி காணப்பட்டுள்ளது.கடந்த மே மாதத்தில், இக்குறியீடு, 12.6 புள்ளிகளாக மிகவும் குறைந்திருந்தது.
இந்த குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால், வளர்ச்சியையும்; 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவையும் குறிக்கும்.ஆய்வில், 59 சதவீத நிறுவனங்கள், மே மாதத்திலிருந்து உற்பத்தியில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளன. 4 சதவீத நிறுவனங்கள் மட்டுமே, வளர்ச்சியைத் தெரிவித்துள்ளன. 37 சதவீத நிறுவனங்கள், உற்பத்தி குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளன.
உற்பத்தி மற்றும் சேவை துறை இரண்டும் சேர்ந்த, ‘கலப்பு பி.எம்.ஐ.,’ குறியீடு, மே மாதத்தில், 14.8 புள்ளிகளாக இருந்தது. இது, தற்போது ஜூன் மாதத்தில், 37.8 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இருப்பினும், இதுவும் சரிவைக் குறிக்கும், 50 புள்ளிகளுக்கு கீழே தான் உள்ளது.
நாடு இதற்கு முன் கண்டிராத பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியுள்ளது. தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், பொருளாதார வீழ்ச்சி, நடப்பாண்டின் இரண்டாவது அரையாண்டிலும் தொடரும்.
ஜோ ஹேய்ஸ்
பொருளாதார நிபுணர், ஐ.எச்.எஸ்., மார்க்கிட்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|