பதிவு செய்த நாள்
03 ஜூலை2020
22:51
புதுடில்லி:உலகளாவிலான வணிக இதழான, 'பார்ச்சூன்' இதழுக்கான இந்திய வெளியீட்டு உரிமையை, 'ஆர்.பி.சஞ்சீவ் கோயங்கா' குழுமம் பெற்றுள்ளது.
ஆர்.பி.சஞ்சீவ் கோயங்கா குழுமம், 30 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாகும். இந்நிறுவனம், 'பார்ச்சூன்' இதழின் வெளியீட்டாளரான, 'பார்ச்சூன் மீடியா' குழுமத்துடன் ஒப்பந்தத்தை செய்துள்ளது.பார்ச்சூன் இதழின், இந்திய பதிப்பு, கடந்த, 2010ம் ஆண்டிலிருந்து வெளிவருகிறது.
இது குறித்து, பார்ச்சூன்மீடியா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஆலன் முரே கூறியதாவது:இந்தியா எங்களுக்கு மிக முக்கியமான சந்தையாகும்.தற்போது, சஞ்சீவ் கோயங்கா குழுமத்தின் கீழ், 'பார்ச்சூன்இந்தியா' மேலும் பலஉயரங்களை தொடும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.பார்ச்சூன் இந்தியா இதழ், 'பார்ச்சூன் இந்தியா 500, பார்ச்சூன் இந்தியா நெக்ஸ்ட் 500, சக்தி வாய்ந்த பெண்கள்' என, பல பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. பார்ச்சூன் நிறுவனம், 1929ம் ஆண்டில் நிறுவப்பட்டு, முதல் வெளியீடு, 1930ல் வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்.பி.சஞ்சீவ் கோயங்கா குழுமம் மின்சாரம், எரிசக்தி, சில்லரை விற்பனை, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகள், நுகர்பொருள் தயாரிப்பு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, விவசாயம் ஆகிய பிரிவுகளிலும் வணிகத்தை மேற்கொண்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|